அன்புள்ள ஜெ,
ஆனந்தபோதினி கட்டுரையை வாசித்தேன். அதிலுள்ள சுட்டிகளைச் சொடுக்கிச் சொடுக்கிச் சென்றபோது ஒரு பெரிய வரலாறே கிடைத்தது. அதில் ஆச்சரியமூட்டும் ஆளுமை எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு. எவ்வளவு பெரிய ஆளுமை. ஆனால் முழுக்கவே மறக்கப்பட்டுவிட்டவர். அவரை மீண்டும் திரட்டி கொண்டு வந்து நிறுத்திய ஆ.இரா.வேங்கடாசலபதி நன்றிக்குரியவர். இத்தகைய எல்லா ஆளுமைகளையும் மீண்டும் நிறுவுவது நல்ல கலைக்களஞ்சியத்தின் பணி. ஆனால் இணையக் கலைக்களஞ்சியம் என்பது ஒரு இணைப்பு வலை. சுப்ரமணிய பாரதி பற்றிய கட்டுரையில் எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு பற்றிய குறிப்பு இருந்தால் கூடவே அவரும் அழியாமல் இருப்பார். அதுதான் தமிழ் விக்கியின் பெரும்பணி என நினைக்கிறேன்.
சங்கர் ராமானுஜம்
எஸ்.ஜி.ராமானுஜலு நாயிடு
Published on June 02, 2022 11:34