தூரனும் வையாபுரிப்பிள்ளையும் – கடிதங்கள்

புனித பீடம் தமிழ் விக்கி- முதல்பதிவு

அன்பு ஜெயமோகன்,

நலமா?

தமிழ்.விக்கி-ஐ துவக்கியதும் அதனை ஒருங்கிணைத்ததும் ஒரு ஆகப்பெரிய மகத்தான செயல். அதற்கு நான் உங்களுக்கு என் வணக்கத்தையும், மனமார்ந்த நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

எனது பல் மருத்துவர், திரு. செல்வமுத்து குமார் அவர்கள் பெரியசாமி தூரனின் பெரிய மகளின் மகனாவார். நான் அவரிடம் தமிழ்.விக்கி பற்றியும் தூரன் விருது பற்றியும் தொலைபேசியில் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ந்தார். அவருக்கு எந்த அளவுக்கு இலக்கியம் பரிச்சயம் என்பது எனக்கு தெரியாது. அவர் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என உங்கள் மின்னஞ்சல் முகவரியை வாங்கி கொண்டார். நீங்கள் அடுத்த முறை சென்னை வரும் போது, அவரை உங்களை பார்க்க அழைத்து வர பார்க்கிறேன்.

மீண்டும், உங்களுக்கும் இந்த தமிழ்.விக்கி சாதனையை சாத்தியமாக்கியவர்களுக்கும் என் அன்பும் வணக்கங்களும்.

நன்றி.

அன்புடன்,

தேவா

***

அன்புள்ள தேவா,

நன்றி

அவருக்கு மின்னஞ்சல் போடுகிறேன்

எதன்பொருட்டெல்லாமோ பெருமை கொள்கிறார்கள். திரு செல்வமுத்துக் குமாருக்கு இன்னும் பல தலைமுறைகளுக்கு பெருமைகொள்ள அடிப்படை இருக்கிறது.

ஜெ

***

அன்புள்ள ஜெ

கலைக்களஞ்சியத்தில் எஸ்.வையாபுரிப்பிள்ளை பற்றி வாசித்தேன். அறுபத்துச் சொச்சம் வயதுதான். ஆனால் எத்தனை பெரிய பணிகளைச் செய்திருக்கிறார். எவ்வளவு ஆய்வு. எவ்வளவு நூல்கள். ஒர் இயக்கமாகவே செயல்பட்டிருக்கிறார். இன்று ஏன் அத்தகைய பேரறிஞர்கள் இல்லை? இல்லை எனக்குத்தான் தெரியவில்லையா?

சரவணக்குமார் எம்

***

அன்புள்ள சரவணக்குமார்

எந்தச் சமூகத்திலும் ஒரு சில காலகட்டங்கள் பெரும் படைப்புக் கொந்தளிப்பு கொண்டவையாக இருக்கும். வையாபுரிப்பிள்ளை வாழ்ந்த காலம் அத்தகையது. தமிழ் வரலாறு எழுதப்பட்டது. தமிழ் மரபு மீட்டெடுக்கப்பட்டது. நவீன மரபுக்கு அடித்தளம் போடப்பட்டது. புனைவிலக்கியத்தில் புதுமை தொடங்கியது. அவர் அதன் நடுவே இருந்தார்.

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2022 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.