கோவை புதியவாசகர் சந்திப்பு

நண்பர்களே,

இந்த வருடம் ஏழாவது ஆண்டாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக ஒரு புதிய வாசகர் சந்திப்பை கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள நண்பர் பாலுவின் பண்ணை இல்லத்தில் நடத்தலாம் என உள்ளோம். நிகழ்வானது பிப்ரவரி மாதம் 19, 20ம் தேதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் ஞாயிறு மதியம் 1.30 வரை நடைபெறும்.

இந்த இரண்டு நாட்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை சந்தித்து பேசலாம். அவர் சனி காலை வந்து ஞாயிறு இரவு தான் ஊர் புறப்படுகிறார். சனி இரவு நிகழ்விடத்திலேயே புதிய வாசகர்களுடன் தங்குகிறார். இலக்கியத்தையும் அறிவுத்துறையையும் தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களை இந்த சந்திப்பிற்கு வரவேற்கிறோம். சந்திப்பில் இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பொதுவாக உரையாடல் அமையும். கடந்த ஆண்டுகளில் இது மிகுந்த பயன் அளித்ததாக சந்திப்பிற்கு வந்திருந்த வாசகர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே ஓரிரு முறை சந்தித்தவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். விருந்தினர் இல்லத்தில் 20 பேர்வரை தங்கலாம், அதனால் சுமார் 20 நபர்களையே ஏற்றுக்கொள்ள முடியும்.

கடந்த ஆண்டுகளில் பதிவு செய்துவிட்டு தகவல் அளிக்காமல் வரத்தவறியவர்கள் இதில் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்த சந்திப்பில் பங்கேற்க விரும்புபவர்கள்,

Name :

Age :

Present town :

Occupation :

Email:

Mobile :

ஆகிய விபரங்களுடன் மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் விவரங்களை ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பவும். உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டவுடன் சில நாட்களில் பதில் மின்னஞ்சல் அனுப்பப்படும். azhaindian@gmail.com

சந்திப்பு நடைபெறும்

இடம் : கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்

தேதி, நேரம் : 19.2.2022 சனி காலை 10 மணி முதல் 20.2.2022 ஞாயிறு மதியம் 1.30 வரை.

தொடர்புக்கு:

மணவாளன்

98947 05976

azhaindian@gmail.com

கோவை தொடர்புக்கு :

பாலு

98422 33881

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 02, 2022 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.