வெள்ளையானை- சரவணக்குமார் கணேசன்

வெள்ளையானை வாங்க

அடிமைகள் – இந்த சொல்லை இப்போது பயன்படுத்தும் போது, நமக்கு தொடர்பில்லாத, ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் பற்றியதாகவோ… தற்கால சூழலில் நாகரீகம் குறைவான சொல்லாகவும் கருதப்படலாம்…

எந்த சூழ்நிலையிலும் வலியவர் ஆக இருப்பவர் எளியவரை அடக்கி ஆளவே துடிக்கிறார். ஆளவும் செய்கிறது.

கணவன்- மனைவி

காதலன் – காதலி

முதலாளி – தொழிலாளி-

ஆசிரியர் -மாணவர்

பெற்றோர் -பிள்ளைகள்

கருப்பு- வெள்ளை

மனிதன் -மற்ற உயிரினங்கள்

போன்ற அத்துணை உறவுகளிலும் ஒவ்வொரு உணர்ச்சியின் வெளிப்பாட்டிலும் நீங்கள் இந்த ஏற்றத்தாழ்வை, அடிமைத்தனத்தை உணர முடியும். இது வெவ்வேறு தருணங்களில் வலியவரால் புகுத்தப்படுதலிலும்,

எளியவரால்

மனமுவந்து ஏற்றுக்கொள்ளுதலிலும் பல்லாயிரம் ஆண்டுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.மானுடத்தின் அடிமையாதல் மற்றும் அடிமையாக்கல் இயல்பின் பெருங்கூறாகவே

ஜாதி,மதம், இனம்,மொழி மற்றும் நாடு

போன்றவற்றை பார்க்க முடிகிறது.

இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் கிட்டத்தட்ட அடிமையாக இருக்கும் ஒருவன் படிப்படியாக அதிகாரத்தை அடையும் போது, அந்த பயணத்தில் அவன் மனம் அவனோடு எப்படி பயணித்தது என்பதை நமக்கு இந்த நாவல் காட்டுகிறது.ஆங்கிலேய அதிகாரி எய்டனுக்கும், அயர்லாந்து அடிமை எய்டனுக்கும் நடக்கும் மன போராட்டத்தின் விரிவே இந்நாவல். எப்போதும் அதிகாரமே வெற்றி பெறுகிறது.

வெள்ளை யானை- பனிக்கட்டி – எய்டன் வெள்ளைக்கார அதிகாரி எய்டனை, வெள்ளை யானை போன்ற பெரிய பனிக்கட்டியுடன் உருவகப்படுத்தி காட்டியிருக்கிறார். வெள்ளை யானையும் பனிக்கட்டியும் சமாதானத்தின் மற்றும் அமைதியின் உருவாக வெள்ளை நிறத்தில் தோன்றினாலும் அதன் குணாதிசயம் மாறப்போவதில்லை. யானைக்கு மதம் பிடிப்பதைப் போல, ஐஸ் பேக்டரியில் பனிமலை தனது கட்டை அவிழ்த்து வேலையாட்களை கொள்ளும்போதும், வெள்ளைக்கார அதிகாரி எய்டன் ஐஸ்ஹவுஸ் வேலையாட்களை தாக்க தன்னிலை அறியா உத்தரவிடும் போதும் நாம் அதை உணர முடிகிறது.

ஏய்டன், ட்யூக், ஃபாதர் ப்ரெண்ணன், மரிஸா, மக்கின்ஸி, துரை சாமி, சாமி, ஜோசப், காத்தவராயன், நாராயணன், பார்மர், ரஸ்ஸல், சவுரி ராயன், கருப்பன், மாக், ஆண்ட்ரூஸ் என்று பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் இந்த கருத்தை மையப்படுத்தி நாவலை சுவாரசியமாக நகர்த்திச் செல்கின்றன.

ஆங்காங்கே பொறிக்கப்பட்ட பதிவுகள்

“ஆட்சி என்பது என்ன? அது மேலோட்டமாக எவ்வளவுதான் சமத்துவம், நீதி, கருணை என்றெல்லாம் பேசினாலும் உள்ளே இருப்பது சுரண்டல்தான். அப்பட்டமான நேரடியான சுரண்டல். அந்தச் சுரண்டலை குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்தால் மட்டும்தான் நான் நல்ல ஆட்சியாளனாக முடியும்.”

“இந்த தேசத்தின் எழுதப்படாத நியதிகளில் ஒன்று அது. செல்வமும் பதவியும் வரும்போது ஒவ்வொரு தாழ்ந்த சாதிக்காரனும் தன்னைத் தன் சாதியில் இருந்து முற்றிலும் விடுவித்துக்கொண்டாக வேண்டும். உயர்சாதியினரைப்போல வேடம் போடவேண்டும். அவர்களின் வழக்கங்களையும் மனநிலைகளையும் அவர்களைவிட மேலாக நகல் செய்ய வேண்டும். சொந்த சகோதரர்களையும் தாய் தந்தையரையும் துறந்து விடவேண்டும்.”

“மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன. இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள். இவை பிறந்து பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டு செல்கின்றன.”

இங்கே பெண்களே ஏன் வெளியே தென்படுவதில்லை?” முன்னால் இருந்த ஜன்னலின் சிறு கதவைத் திறந்து ஏய்டன் கேட்டான். “அவர்களும் எங்களைப் போலவே தீண்டப்படாதவர்கள் சர்”. “ஆம், நாங்கள் வெளியே நிறுத்தப்படுகிறோம். அவர்கள் உள்ளே அடைக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.”

“இங்கே எல்லாருமே யாருக்காவது உயர்சாதிதான். எல்லாருமே யாருக்காவது தீண்டப்படாத சாதியும்கூட.”

தங்கள் வாழ்க்கையை நியாயப்படுத்தாத மனிதர்கள் எவரும் இந்த மண்ணில் வாழமுடியாது”

1800 களின் முற்பகுதியில், இருந்த ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் வலிகளையும்… வலிகளை மட்டுமே நாவல் காட்டுகிறது. வலிகள் மட்டுமே இருந்திருக்கக்கூடும்.

சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு எழுத்தும் சிவப்பு மையினால் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது. அது உங்கள் மூளைக்கு தரும் செய்தி உங்களால், உணர முடியாத, உகிக்க முடியாத செய்தியாகவும் இருக்கக்கூடும். மிகப் பெரிய தாக்கத்தையும் விளைவுகளையும் தரக்கூடும். இந்த வெள்ளை யானை படித்து முடிக்கும்போது இந்தத் தாக்கத்தை உட்கிரகித்த யானையாகவும் நாம் இருக்கக்கூடும்.

சரவணக்குமார் கணேசன்

வெள்ளையானை- இலக்கணம்

வெள்ளையானையும் இந்துத்துவமும்

வெள்ளையானை – வாசிக்காமல் ஒரு விமர்சனம்

வெள்ளையானையும் கையறுநிலையும்

நீதியுணர்வு ஓர் ஆட்கொல்லி நோய்- வெள்ளையானை

காலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை

வெள்ளையானை – இந்திரா பார்த்தசாரதி

வெள்ளையானை -கேசவமணி

இலக்கணம்- வெள்ளையானை- மொழி

வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீது…: ராஜகோபாலன்

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

வெள்ளையானையும் கொற்றவையும்

வெள்ளையானை- சுரேஷ் பிரதீப்

வெள்ளையானையும் மீட்கப்பட்ட கப்பலும்

வெள்ளையானை – ஒரு விமர்சனம்

வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்

வெள்ளையானையும் பிழைகளும்..

வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும்

வெள்ளையானை- கடிதம்

வெள்ளையானை- கடிதங்கள்

வெள்ளையானை- கடிதம்

வெள்ளையானை – பலராம கிருஷ்ணன்

வெள்ளையானை -சிவமணியன்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானையும் உலோகமும்

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

வெள்ளையானை – கடிதம்

வெள்ளையானை கடிதங்கள்

வெள்ளையானை – கடிதங்கள்

வெள்ளை யானை, கடிதங்கள்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானை- கடிதங்கள்

வெள்ளையானை- கடிதம்

வெள்ளையானை- கடிதங்கள்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானை – கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.