செப்டெம்பர்- கடிதங்கள்

செப்டெம்பரின் இசை

ஜெ

நினைவுகளில் மட்டும் ஞாபகமா இருந்த இந்த இசை பல நேரங்களில் எங்கள் தியேட்டர் அனுபவத்தைப் பற்றி பேச்சுக்களில் இந்த கம் செப்டம்பர் இசை இடம்பெறாமல் இருப்பதில்லை அந்த அளவுக்கு உயிரோடு உயிராக கலந்த இசையாக இருந்தது எங்கள் ஊர் திட்டக்குடியில் கிருஷ்ணா பேலஸ் எங்களது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலேயே இருந்ததால் பதினோரு மணி ஆட்டமாக இருந்தாலும் மேட்னி ஷோ என்றாலும் ஒவ்வொரு நாளும் இந்த கடைசி ரெக்கார்ட் ஒலிக்காத நாள் பாக்கி இருக்காது பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருக்கும் வேலையிலே மூன்று மணிக்கு இந்த இசை இசைக்கும் மனசை என்னவோ செய்யும் அதில் எல்லோரும் லயித்து இருப்போம்

இப்பொழுதும் இந்த நாள் வரை உங்கள் கட்டுரையை படிக்கும் இந்த நிமிடம் வரை இந்த இசை இவ்வளவு புகழ்பெற்றது என்றோ அல்லது இதற்குப் பின் இத்தனை செய்திகள் உண்டு என்று எனக்கு தெரியாது இன்னும் சொல்லப்போனால் இந்த இசையை இன்னொரு முறை கேட்பேன் என்றுகூட நினைத்து பார்க்கவில்லை ஏனென்றால் அந்த இசைமனதில் இருக்கிறதே தவிர அதை எங்கே தேட வேண்டும் இப்படி அடையாளம் கொள்வது என்ற எதுவும் தெரியாது எதேச்சையான நிமிடங்கள்தான் வாழ்க்கையை அடையாளங்காண உதவுகின்றன அந்த வகையில் இந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தமான என் குழந்தைகளுக்கு சொல்ல மட்டுமே தெரிந்த இசையை இப்பொழுது இந்த பாடல் தானம்மா எங்களுடைய பழைய தியேட்டர் கால வாழ்க்கையில் கடைசி ரெக்கார்டு என்று சொல்லி பூரித்துப் போனேன் ஆயிரம் முறை நன்றி சொன்னாலும் தகும் நன்றி நன்றி நன்றி

அன்பு உத்ராபதி

***

அன்புள்ள ஜெ

ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்து ராமண்ணா இயக்கிய ’நான்’ சினிமா வந்தபோது எனக்கு 15 வயது. அன்றைக்கு அந்தப்படம் பெரிய கிரேஸ். அன்றைய தரத்துக்கு அற்புதமான லொக்கேஷன். உற்சாகமான பாட்டுக்கள். [அதிலுள்ள ராஜா கண்ணு போகாதடி பாட்டு அன்றைக்கு மிகப்பெரிய குத்துப்பாட்டு] அதே முகம்தான் அதிலுள்ள மிகச்சிறந்த பாட்டு

அத்துடன் மிக அழகான கதாநாயகி. அன்றைக்குள்ள கதாநாயகிகள் எல்லாமே நடுவயது, குண்டு. ஜெயலலிதா சின்னப்பெண்ணாக இருந்தார். ஆகவே அந்தப்படம் என் வயதொத்தவர்களின் பித்தாக இருந்தது. அதில் இடம்பெற்ற இந்தப்பாட்டு அந்த ஆண்டு முழுக்க ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது. ரேடியோ விளம்பரத்தில் அந்த ஆரம்ப ஹம்மிங் போட்டுத்தான் ஸ்ரீவினாயகாபிக்சர்ஸின் நான் என்று விளம்பரம் செய்வார்கள்.

ஆனால் அந்தமெட்டு இப்படி ஒரு வரலாறு உடையது என்று இப்போதுதான் தெரிந்தது. அந்த தொடக்கமெட்டு அபாரமானது. அது மூலத்தில் இல்லை. அந்தவகையில் கொஞ்சம் ஆறுதல்.

கே.ராமமூர்த்தி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2022 10:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.