சுமையும் சுவரும்- இரு கவிதைகள்

போகனின் இரு கவிதைகள், ஒன்று எடை அல்லது சுமை பற்றி. இன்னொன்று சுவர் பற்றி. நவீனக்கவிதையில் மிகமிக அடிக்கடி வந்தமையும் இரண்டு படிமங்கள் இவை. [நான் எழுதி அச்சான முதல் கவிதையே சுவர்களைப் பற்றியது. கைதி கொல்லிப்பாவை இதழில் வெளிவந்தது. அடுத்த கவிதை சுமை பற்றியது. ] மரபார்ந்த கவிதையில் அதிகமாக இல்லாத இரண்டு படிமங்கள் இவை. நவீனக் கவிதை ஏன் இந்த படிமங்களை இத்தனை தூரம் எடுத்தாள்கிறது?

அதற்குப் பதிலாக ஒன்றே சொல்லமுடியும். நவீனக் கவிதை மரபார்ந்த கவிதை நோக்காத இன்னொரு திசையை நோக்குகிறது. அது விடுதலையைப் பற்றிப் பேசுவதைவிட சிக்கிக்கொண்டவனின், துரத்தப்படுபவனின் தவிப்பைப் பற்றியே பேசுகிறது. ஆகவே களியாட்டங்கள் நவீனக்கவிதையில் பேசுபொருளாவது குறைவு. அது துயரை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது.

நான் அக்கவிதைகளை எழுதிய நாட்களை எண்ணிக்கொள்கிறேன். முதன்மையாக தனிமை, சாவின் அண்மை, தத்துவார்த்தமான வெறுமை ஆகியவற்றில் மூழ்கியிருந்த நாட்கள். அவை என் நோயின் விளைவாக உருவானவையா, நோய் அவற்றால் உருவானதா என்பது இன்றும் புரியாதது.நோய் மிக அரிதாகவே மரபிலக்கியத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

ஆனால் செவ்வியலில் எல்லாமே ஏற்கனவே இருக்கும். இக்கவிதைகளின் உளநிலையைச் சொல்லும் ஒரு புறநாநூறுப் பாடல் உண்டு.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

[ஓரேழுழவர்]

தோலை உரித்து திருப்பியதுபோன்ற

விரிந்த வெண்மையான களர் நிலத்தில்

வேடனால் துரத்தப்படும் மான் போன்றிருக்கிறேன்.

ஓடி தப்பிவிடவும்கூடும்.

சுமந்திருக்கும் வாழ்க்கை

கட்டியிருக்கிறது கால்களை

 

சிஸிபஸ் போலவோ

நாரணத்துப் பிராந்தன் போலவோ

என் துயரப்பாறையை

ஒவ்வொரு முறையும்

உச்சிக்கு உருட்டிப்போகிறேன்.

ஒவ்வொரு முறையும்

அது மேலும் விசையுடன்

மேலும் எடையுடன்

என் மேலேயே உருண்டுவிழுகிறது.

அப்படியே

நீண்ட நாள் நண்பர்கள் ஆலிங்கனம் போல்

கொஞ்ச காலம் கிடக்கிறோம்

இருளில்

நானும் அதுவும்.

பிறகு மீண்டுமொரு முறை

நான் அதை உச்சிக்கு

உருட்டத் துவங்குகிறேன்.

உன்னுடன் போராடும் இந்த பிரயாணம் சலிப்பூட்டுகிறது.

நீ இன்னும் எத்தனை முறை

நம்பிக்கை இழக்காமல் இருப்பாய் நண்பா?

நாம் இங்கேயே இப்படியே

அணைத்துக்கொண்டு கிடந்தால் என்ன?

என்று மீண்டுமொருமுறை

அது கேட்கிறது.

 

கண்ணுக்குத் தெரியாத

சுவர் ஒன்று

எப்போதும் என்னைச் சுற்றி

நகர்ந்துகொண்டிருக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத கை ஒன்று

என் கையைப் பிடித்து எழுதுகிறது.

கண்ணுக்குத் தெரியாத பாதை ஒன்றில்

என் கால்கள் தாமாகவே

என்னை அழைத்துச் செல்கின்றன.

கண்ணுக்குத் தெரியாத கண் ஒன்று

இவை யாவும்

என் கண்ணுக்குத் தெரியாது நடக்கிறதா

என்று கண்காணித்துககொண்டிருக்கிறது

 

துளிக்கும்போதே அது துயர்

கவிதையை அறிதல்

தீபம்- போகன் சங்கர்

மழை இருகவிதைகள்:போகன் சங்கர்

மொழியாதது

தீர்வுகள் – போகன்

ஏன் அது பறவை?

ஒரு கவிதை

அலைகளில் அமைவது

சதீஷ்குமார் சீனிவாசன் – உதிர்வதன் படிநிலைகள்

இரண்டு கவிதைகள்- சதீஷ்குமார் சீனிவாசன்

பிறிதொன்று கூறல்

முன்னிலை மயக்கம்

துள்ளுதல் என்பது…

மதார்- பேட்டி

பறக்கும் வெயில்- சக்திவேல்

அன்றாட வாழ்வின் அழகியல்- பிச்சைக்காரன்

அனலோனும் குட்டிப் பயலும்-என். நிரஞ்சனா தேவி

தனிமை -ஆனந்த்குமாரின் மூன்று கவிதைகள்

மொக்கவிழ்தலின் தொடுகை

ஊடும்பாவுமென ஒரு நெசவு

இறகிதழ் தொடுகை

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

க்ருஷ்ணன் நிழல்:முகுந்த் நாகராஜன்

பழைய யானைக் கடை

கரவுப்பாதைகள்

சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு

இசையின் கவிதை- ஏ.வி.மணிகண்டன்

இசையின் வரிகள்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

ரகசியச் சலங்கை

ஒரு செல்லசிணுங்கல்போல….

அலைச் சிரிப்பு

லக்‌ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

விஜி வரையும் கோலங்கள்

இறகிதழ் தொடுகை

அய்யா வைகுண்டர் இதிகாசம்

அதற்காகத்தான் இத்தனை நடனமா ?

கவிதைக்குள் நுழைபவர்கள்…

வெயில்

வெயில் கவிதைகள்

கள்ளமற்ற கவிதை

வெயில், நகைப்பு – கடிதம்

வெயில் கவிதைகள்

ஓர் ஆவேசக்குரல்

பழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்

கீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்

பான்ஸாய்க் கடல்

ச.துரை -மேலும் நான்கு கவிதைகள்

கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

கண்டராதித்தன் கவிதைகள்

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு

சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்

பவிழமிளம் கவிளிணையில்…

கவிதை வாசிப்பு- டி.கார்த்திகேயன்

ஆண்டாளை நாம் எப்படி அணுகுவது- பெருந்தேவி

விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி

விரலிடுக்கில் நழுவுவது

பெரு விஷ்ணுகுமார்

மறுபக்கத்தின் குரல்கள்

ஊட்டி- வி என் சூர்யா

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

கோடுகளை மீறி…ஆழியாளின் கவிதைகள்

இரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்

மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

கரவுப்பாதைகள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2021 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.