புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறவுள்ள எனது பத்து புதிய நூல்களின் வெளியீட்டுவிழா சம்பிரதாயமான முறையிலிருந்து மாறுபட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

தலைமை, வாழ்த்துரை என எதுவும் கிடையாது. பத்து நூல்களுக்கும் தனி உரைகள் நிகழ்த்தப்படப்போவதில்லை

நிகழ்வின் துவக்கத்தில் புதிய நூல்களை வெளியிடுகிறோம். அன்பிற்குரியவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள்

எனது புதிய நாவலை எனது நண்பரும் தேர்ந்த இலக்கியவாசகருமான திருப்புகழ் IAS அவர்கள் வெளியிட்டு உரை நிகழ்த்துகிறார்

அதைத் தொடர்ந்து நாவலின் சில பகுதிகளை நான் வாசிக்க இருக்கிறேன்

மண்டியிடுங்கள் தந்தையே நாவல் உருவான விதம் பற்றி அகரமுதல்வன் என்னுடன் கலந்துரையாடல் நிகழ்த்துகிறார்

அடுத்த அமர்வாக காந்தியின் நிழலில் நூலை காந்தி கல்வி நிலையத்தின் சரவணன் பெற்றுக் கொண்டு என்னுடன் கலந்துரையாடல் செய்ய இருக்கிறார்

டான்டூனின் கேமிரா என்ற சிறார் நூல் வண்ணத்தில் வெளியாகிறது. புகழ்பெற்ற ஒவியர் நரேந்திரபாபு இதற்கான ஒவியங்களை வரைந்து தந்திருக்கிறார்

நரேந்திரபாபு

இந்த நூல் பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரையில் முறையில் தனி நூலாகவும் வெளியாகிறது.

தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்

••••

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 14, 2021 04:45
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.