பயணம் இரு கேள்விகள்

நிலவும் மழையும்- 4 நிலவும் மழையும்- 3 நிலவும் மழையும்-2 நிலவும் மழையும்-1

அன்புள்ள ஜெ

நீங்கள் மழைப்பயணத்தில் இருக்கும்போது இங்கே பலவகையான சர்ச்சைகள். எல்லாமே உங்களைத் தொட்டுச்சென்றன. நீங்கள் அவற்றை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவற்றில் நீங்கள் ஈடுபடாமல் போனதற்கு மழைப்பயணம்தான் காரணமா என்று நினைத்துக்கொண்டேன்.

என்.ராஜ்குமார்

***

அன்புள்ள ராஜ்குமார்

நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள், சாதாரணமாக நான் விவாதங்களில் தலையிடுவதில்லை. குறிப்பாக தனிப்பட்ட சர்ச்சைகளில்.

அவ்வப்போது நான் எழுதுவதை ஒட்டி விவாதங்கள் எழுவதனால் நான் சர்ச்சைகளில் ஈடுபடுவதான ஒரு சித்திரம் உருவாகிறது. சில தருணங்களில் கறாராக சில மதிப்பீடுகளை வைக்கவேண்டிய தேவை எழும்போது மட்டுமே எழுதுகிறேன்.

இப்போதிருக்கும் மனநிலையே வேறு. நான் செல்லவேண்டிய இடங்களும் வேறு.

ஜெ

அன்புள்ள ஜெ

குதிரேமுக் பயணத்தில் நீங்கள் அடைந்தது என்ன? எல்லைகளை மீறிச்செல்வது பற்றிச் சொன்னீர்கள். எல்லைகளை எதுவரை மீறுவது? இமையமலைக்கே ஏறவேண்டியதுதானா? இத்தனை பயணங்களுக்குப்பிறகும் எது உங்களுக்குத் தேவையாகிறது?

ஆனந்த்

***

அன்புள்ள ஆனந்த்,

அறிதல்கள், பரவசங்கள் தேவைப்படுகின்றன. அன்றாடத்தில் இருந்து மேலே செல்லாமல் அவற்றை அடைய முடியாது.

அன்றாடம் என்பது நம் அறிதல்களை மறைக்கும் பெரிய திரை. நாம் தினந்தோறும் பார்க்கும் இயற்கை நமக்கு தகவல்களாக, புழங்கிடமாக மாறிவிடுகிறது. முற்றிலும் புதியநிலமே இயற்கையின் தோற்றமாக, நாம் ஏற்கனவே அளித்த அர்த்தங்கள் ஏதுமில்லாததாக, தெரிகிறது. அது பெரிய அறிதலை, இருத்தலின் பரவசத்தை அளிக்கிறது. இன்மையின் பரவசமும்தான்.

ஆனால் இது ஆன்மிகநிலையின் தொடக்கமே. ஒருவேளை கடந்தால் இருந்த இடத்தில் ஓர் இலைநுனியைக் கொண்டே இதை அடையக்கூடும்.

ஜெ

***

ஜெயமோகன் நூல்கள் வாங்க

வடிவமைப்பு கீதா செந்தில்குமார்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2021 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.