எரிந்த திரியின் நுனிக்கரியை விரல்களால் நசித்து நெற்றியில் அப்பிக்கொண்டு கூந்தலை விரித்து நின்று இன்மையூறும் திசைநோக்கி உச்சாடனம் செய்யும் அவள் மந்திரங்களோ பிறருக்கும் கேட்காது. அவள் பாடும் பாடல்களின் அர்த்தம் மொழிக்கும் தெரியாது. மந்திரங்களும் மர்மங்களும் ஆச்சியின் விலா எலும்புகளால் இக்கிராமத்தின் குருதியிலேயே எழுதப்பட்டதென்பாள் என்னுடைய அம்மா.
சிறுகதை: மாபெரும் தாய் –அகரமுதல்வன்
Published on May 30, 2021 11:31