Error Pop-Up - Close Button Sorry, you must be a member of this group to do that.

புத்தகக் காட்சி தினங்கள் -2

நேற்று புத்தகக் கண்காட்சியில் நல்லகூட்டம். நீண்ட காலத்தின் பின்பு அலை அலையாகப் புத்தகம் வாங்க வந்த மக்களைக் காணச் சந்தோஷமாக இருந்தது.

வழக்கமாக எந்த வரிசையில் எந்தக் கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் ஒன்றை பபாசி அளிப்பார்கள். சில நேரம் அது தன்னார்வலர்கள் முயற்சியிலும் வெளியிடப்படும். இந்த ஆண்டு அப்படி எந்தத் தகவலும் தெரியாத காரணத்தால் தேசாந்திரி அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் அலைந்து திரிந்து நிறைய பேர் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

பபாசி கடைகளின் பட்டியலை வெளியிட்டால் வருகை தருகிறவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

எட்டாவது வழியாக வந்தால் அதன் கடைசியில் தேசாந்திரி அரங்கு உள்ளது. அரங்க எண் 494 மற்றும் 495.

தனது புத்தகத்தை வெளியிடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இளைஞர்கள் பலரும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வது போல ஒரு அரங்கினை அமைத்து புதிய எழுத்தாளர், கவிஞர்கள் எப்படித் தனது நூலை வெளியிட இயலும் என்பதற்கு வழிகாட்டும் பயிற்சி செய்தால் நன்றாக இருக்கும். குறைந்த பட்சம் ஒரு நாள் மாலை அமர்வினையாவது பொது அரங்கில் ஏற்பாடு செய்யலாம்.

பப்ளிகேஷன் டிவிசன் அரங்கில் மிக நல்ல நூல்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக காந்தி மற்றும் நேரு குறித்த அரிய நூல்கள் நிறைய இருக்கின்றன. காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் MAHATMA – Volumes 1 to 8 by D.G. Tendulkar இங்கே கிடைக்கிறது

தேசாந்திரி அரங்கில் ஆன்டன் செகாவ். தஸ்தாயெவ்ஸ்கி. டால்ஸ்டாய் உருவம் கொண்ட அழகிய போஸ்ட்கார்டுகளை இலவசமாக விநியோகம் செய்து வருகிறோம். ஆசையாகப் பெற்றுக் கொண்டு போகிறார்கள்.

நேற்று எனது பத்து நூல்கள் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இன்னும் பத்து நூல்கள் இரண்டு நாட்களில் வெளியாகும். துணையெழுத்து கெட்டி அட்டை பதிப்பாக வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து வந்திருந்த ஒரு குடும்பம் நேற்று எனது அத்தனை நாவல்களையும் ஒரு சேர வாங்கினார்கள். அத்தனை நூலிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் எனது மகனுடன் அலைபேசியில் பேசுங்கள் என்று ஒருவர் தனது போனை என்னிடம் கொடுத்தார். அமெரிக்காவிலுள்ள வாசகர் வீடியோ காலில் என்னுடன் உரையாடி தேவையான புத்தகங்களைச் சொன்னார். அவரது பெற்றோர் அதை வாங்கிக் கொண்டு போனார்கள். அமெரிக்காவில் வசித்தபடியே சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குமளவு உலகம் சுருங்கிவிட்டது நல்ல முன்னேற்றமே.

தினமும் நாலைந்து புத்தகங்களைத் தேடி வாங்குவது எனது வழக்கம். நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்

வாசக சாலை நண்பர்கள் அனைவரையும் இரவு சந்தித்தேன். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2021 00:04
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.