எனது பரிந்துரைகள் -3

சென்னை புத்தகக் கண்காட்சியின் மூன்றாம் நாளுக்கான எனது பரிந்துரைகள்.

••

பிறக்கும் தோறும் கவிதை

ஷங்கர் ராமசுப்ரமணியன்

வனம் வெளியிடு

கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் நவீன கவிதையுலகில் தனித்துவமான கவிஞர். கவிதைகள் குறித்த அவரது கட்டுரைகள் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாக அமைந்தவை. சமகாலத் தமிழ் கவிதைகள் குறித்த அவரது இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நவீன தமிழ்க்கவிதையின் போக்கினையும் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது

இயந்திரம்

மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல்.
தமிழாக்கம் ஆனந்தகுமார்.

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு.

அரசு அலுவலகங்களில் செயல்படும் ஊழல் மற்றும் அதிகாரப் போட்டி. அராஜகமான நடவடிக்கைகள் குறித்து மிக விரிவாக எழுதப்பட்ட சிறந்த மலையாள நாவல்.

கடற்புறத்து கிராமம்

அனிதா தேசாய்.

நேஷனல் புக் டிரஸ்ட்.

கடற்கரை கிராமம் ஒன்றின் வாழ்வியலை விவரிக்கும் சிறந்த நாவல். கார்டியன் இதழில் பரிசினை வென்ற நூலிது. துல்லியமான, அடர்த்தியான மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் சிறந்த ஆவணப்படம் போல வாழ்க்கையை உண்மையாகப் பதிவு செய்துள்ளது

என் நண்பர் ஆத்மாநாம்

ஸ்டெல்லா ப்ரூஸ்

விருட்சம் வெளியீடு

கவிஞர் ஆத்மாநாம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த நினைவுக்குறிப்பு. எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தனது மனைவி ஹேமாவின் மறைவு பற்றி எழுதிய உணர்வுப்பூர்வமான பதிவு என மிக அழகான கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு

எனது போராட்டம்

ம.பொ.சி

பூங்கொடி பதிப்பகம்.

தமிழறிஞர் ம.பொ.சியின் தன்வரலாற்றுடன் விடுதலைப்போராட்ட காலம் மற்றும் எல்லைப்போராட்ட வரலாற்றை விவரிக்கும் சிறந்த நூல்.

2 likes ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2021 18:41
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.