அந்த நாட்களில் ஒன்று


     






   






   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்

       அதுவும் ஒன்று


கானகத்தின் அமர வாழ்வுக்குச்

சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானை

சறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டது

பொந்திடை அணில் பதறி வந்து

பச்சிலைகளைக் கொறித்துப்போட்டது

நான் அதை விழுதாக அரைத்தேன்

அணில் காயத்துக்குப் பற்றுப்போட்டது




அப்போது

வானம் ஆதுரமாகப் புன்னகை செய்தது

நூற்றாண்டுக் கடம்பமரம் மலர்மாரி பெய்தது


   மிக மிக மிக மகிழ்ச்சியாக

   நானிருந்த நாட்களில் ஒன்று அது.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2020 10:00
No comments have been added yet.


Sukumaran's Blog

Sukumaran
Sukumaran isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Sukumaran's blog with rss.