நிவேதியின் இரண்டாம் நாள் குசும்பு

காலையில் கையில் தேநீர்க் கோப்பையோடு நிவேதி வந்தாள்."மாமா டீ சாப்டியா?""சாப்டேனே"ஓடிவிட்டாள்.கொஞ்ச நேரத்தில் அழுதழுது கண்கள் சிவந்திருந்த நிவேதியைத் தூக்கிக் கொண்டு வந்த விக்டோரியா,"பாப்பாவ என்ன செஞ்சீங்க?""ஒன்னும் செய்யலையேப்பா""இல்லத்த டீய பர்ஸ்டா குடிச்சாங்க"அப்போது தான் இருவருக்கும் புரிந்தது. எது செய்தாலும் அவள்தான் பர்ஸ்ட் செய்யனுமென்பது வீட்டின் விதி. சடாரென சமாளித்த விக்டோரியா"மாமாக்கு இன்னும் டீயே கொடுக்கலப்பா. பாப்பா குடிக்காம மாமாக்கு தருவனா" என்றவாறே இன்னொரு டம்ளர் தேநீரைக் கொடுத்தவாறே, "இப்பதான் கொடுக்கறேன் பாரேன்" என்றதும்"ஐ! நாந்தான் பர்ஸ்டு" என்று கைகளைத் தட்டிக் கொண்டே ஓடிவிட்டாள்.குழந்தைகள் உலகம் குதூகலாமானது என்பதோடு சமயத்தில் இரண்டாவது கோப்பை தேநீரோடும் நம்மை அது ஆசீர்வதிக்கக் கூடும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 28, 2018 23:29
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.