Karukku Quotes
Karukku
by
Bama678 ratings, 4.00 average rating, 97 reviews
Karukku Quotes
Showing 1-10 of 10
“If a woman so much as stands alone and by herself somewhere, all sorts of men gather around her showing their teeth.”
― Karukku
― Karukku
“I comfort myself with the thought that rather than live a life with a fraudulent smile, it is better to lead a life weeping real tears.”
― Karukku
― Karukku
“போலித்தனமா சிரிச்சுக்கிட்டு வாழுறத விட, நெசத்துக்கு அழுதுக்கிட்டே வாழுறது பரவாயில்லன்னு மனசத் தேத்திக்கிட்டு இருக்கேன்.”
― Karukku
― Karukku
“எம்புட்டோ சிந்திக்கிறோம். என்னென்னவெல்லாமோ நெனைக்குறோம். படிக்கிறோம். ஆனா நெச வாழ்க்கையில எல்லாமே மொரண்பாடாத்தான் அமையுது.”
― Karukku
― Karukku
“நானு ஆறாங்கெளாஸ் படிக்கும்போது எங்க வீட்ல கரண்டு இழுத்தாங்க. அதுவரையில சீமத்தண்ணி வெளக்குத்தான் வச்சிருந்தோம். கரண்டு இழுத்த புதுஸ்ல லைட் போட, அமத்த ரொம்ப புடிக்கும். வீட்ல அதுக்குச் சண்டகூட வரும். எங்க பாட்டிகூட சும்மா சும்மா லைட் போட்டு போட்டு அமத்திக்கிட்டு சின்னப் பிள்ளகெனக்கா சிரிப்பா. "என்ன மாயத்துல இப்பிடி கரண்டு கண்டுபிடிச்சு வச்சிருக்காம்பாரு. தட்டிஉட்ட ஒடனே லபக்ணு கரண்டு புடுச்சு லைட் எரியுதுன்னு" அடிக்கடி ஆச்சரியமா சொல்லுவாக. சீமத் தண்ணிமாறி கரண்டு காலியாகமலே எரியுறதுல பாட்டிக்கு ரொம்ப சந்தோசம்.”
― Karukku
― Karukku
“ஒழைக்குறதுக்கு ஒரு சாதி. ஒக்காந்து திங்கறதுக்கு ஒரு சாதின்னு பிரிச்சு வச்சுருக்காங்க.”
― Karukku
― Karukku
“நாலாவது வருசம் காலேஜ்டேன்னு வச்சாங்க. அது ரொம்ப கிராண்டா கொண்டாடுனாங்க. கடேசி வருசப் பிள்ளைக எல்லாரும் பட்டுச் சீல கெட்டி, சோடிச்சு பார்டிக்கு வருவாங்க. எங்கிட்ட மருந்துக்குக்கூட ஒரு நல்ல சீல இல்ல. என்ன செய்றதுன்னுந் தெரியல. யாருகிட்டேயும் போயி கடனா வாங்கிக் கெட்டவும் புடிக்கல. அன்னைக்குனு பாத்து எங்கிட்டும் போகவும் முடியாது. உடவும் மாட்டாங்க. அதுனால ஏம் பாட்டுக்கு குளிப்பு ரூமூக்குள்ள போயி இருந்துக்கிட்டு கதவெப் பூட்டிக்கிட்டேன். எனக்கு ஏ நெலமைய நெனச்சு அழுகை அழுகையா வந்துச்சு. கையில துட்டு இல்லன்னா எப்படியெல்லாம் அவமானப் படவேண்டி இருக்குன்னு தெருஞ்சிக்கிட்டேன்.
....அந்த பார்ட்டி முடியுற வரைக்கும் பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சு கெடந்தேன்.”
― Karukku
....அந்த பார்ட்டி முடியுற வரைக்கும் பாத்ரூமுக்குள்ள ஒளிஞ்சு கெடந்தேன்.”
― Karukku
“லைப்ரேரியில கூட இப்படித்தானாம். சேரித்தெரு பறப்பயலுகன்னா ஒரு சைசாத்தான் பாப்பானுகளாம். அண்ணன் ஒரு தடவ கையெழுத்து போடும்போது பேருகூட தன்னோட படிப்பையும் எம்.ஏ.ன்னும் வேணுமின்னே எழுதினாங்களாம். ஒடனே அந்த லைப்ரேரியன் ஒரு ஸ்டூல் போட்டு ஒக்காருங்கன்னு சொன்னதுமில்லாம சார் சார்னு வேற கூப்பிட ஆரப்பிச்சிடானாம்.
இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவே இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினால, நமக்குன்னு மதிப்போ, மரியாதையோ, கௌரவமோ இல்லாம போச்சு. ஆனா நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்தோம்னா, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்தா, கவனமா படிச்சிரு. படிப்பிலே மொதல்பிள்ளன்னா, எல்லோரும் ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பாக. அதனால கஷ்டப்பட்டு படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்க. இது என் மனசிலே ரொம்ப ஆழமாப் பதிஞ்சுபோச்சு. அதனால முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன். அண்ணன் சொன்னது போல, வகுப்புல முதல் ஆளா நின்னேன், அதனாலயே நான் பறைச்சினாக்கூட நிறையப்பேரு எங்கிட்ட சிநேகிதம் பண்ணிக்கிட்டாங்க.”
― Karukku
இத அண்ணன் எங்கிட்ட சொல்லும்போது கூடவே இந்த பறச்சாதியில் நாம் பொறந்திட்டதினால, நமக்குன்னு மதிப்போ, மரியாதையோ, கௌரவமோ இல்லாம போச்சு. ஆனா நாம நல்லா படிச்சு முன்னுக்கு வந்தோம்னா, இந்த அசிங்கமெல்லாம் இல்லன்னு ஆக்கிப்போடலாம். அதுனால கருத்தா, கவனமா படிச்சிரு. படிப்பிலே மொதல்பிள்ளன்னா, எல்லோரும் ஒங்கிட்ட படிப்புக்காக ஒட்டிக்க பாப்பாக. அதனால கஷ்டப்பட்டு படிச்சிக்கிடனும் அப்படீன்னு சொன்னாங்க. இது என் மனசிலே ரொம்ப ஆழமாப் பதிஞ்சுபோச்சு. அதனால முழு மூச்சா வெறித்தனமா படிச்சேன். அண்ணன் சொன்னது போல, வகுப்புல முதல் ஆளா நின்னேன், அதனாலயே நான் பறைச்சினாக்கூட நிறையப்பேரு எங்கிட்ட சிநேகிதம் பண்ணிக்கிட்டாங்க.”
― Karukku
