ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi Quotes
ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
by
Kota Shivarama Karanth1,053 ratings, 4.30 average rating, 87 reviews
ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi Quotes
Showing 1-5 of 5
“மகன் குருவனைப் பார்க்கப் பயணம் புறப்பட்ட சோம, காலை வீசிப் போட்டு வேகமாக நடந்தான். அவனது குடிசையிலிருந்து எங்கே போவதாயிருந்தாலும் முதலில் ஒரு குட்டித் தேவதையின் கோயிலைத் தாண்டித்தான் போக வேண்டும். அது பஞ்சுர்லி பூதத்தின் கோயில். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அங்கே நின்று தரையில் விழுந்துக் கும்பிட்டுவிட்டு புறப்பட்டு போவதுதான் அவன் வழக்கம். வழிகாட்டியைப் போல அவனுக்கும் முன்னால் போகும் சோமனின் நாய் சோணியும் கூட பஞ்சுர்லி கோயில் வந்தவுடன் தானாகவே நின்றுவிடும். சோம வந்து தரையில் விழுந்துக் கும்பிட்டு எழுந்து நின்ற பிறகுதான் அதுவும் அவனுக்கு முன்னால் புறப்பட்டுப் போகும். இன்றைக்கும் கூட கோயில் வந்தவுடன் சோணி நாயும் வழக்கம்போல் நின்றது. சோமனும் தன்னையறியாமல் தடுமாறி நின்று முழங்கால்களை பழக்கத்தின் காரணமாக மடித்து ஊன்றி நின்றான். இதயம் சூடேறியது. 'தான் பாதிரி மதத்துல சேரப் போறவன். இதுக்குமேல பஞ்சுர்லிக்கு முட்டி போடுவதா?' - என்ற எண்ணம் தோன்றியது! கால்களை நிமிர்த்தி எழப் பார்த்தான். முடியவில்லை. பஞ்சுர்லி பூதம் தன் எதிரில் நிற்பதாகத் தோன்றியது.
"சோமா... மீசை நரைக்கிற வரைக்கும் என்னையே நம்பி என் பக்தனா இருந்துட்டு, இப்போ, சாகிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி, என்னை விட்டுட்டு, பாதிரி பின்னால போகப் போறியா?" என்று கேட்ட மாதிரி இருந்தது. அவன் உடம்பு சிலிர்த்தது.”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
"சோமா... மீசை நரைக்கிற வரைக்கும் என்னையே நம்பி என் பக்தனா இருந்துட்டு, இப்போ, சாகிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி, என்னை விட்டுட்டு, பாதிரி பின்னால போகப் போறியா?" என்று கேட்ட மாதிரி இருந்தது. அவன் உடம்பு சிலிர்த்தது.”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
“இனிமே வாணாம், இந்த ஊரு தெய்வத்தோட சவகாசமே வாணாம்! இனிமே, தனக்கும் சிலுவக்கார சாமிதான்! மகன் குருவன விவசாயம் பண்றவனா பண்ணின பாதிரிங்க சாமிதான் தனக்கும்”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
“நீலன் இறந்துபோன நினைவும் அவனைவிட்டு நீங்காமலேயேயிருந்தது. அப்போது நீலனைக் காப்பாற்ற முயன்ற பார்ப்பன இளைஞனைத் தடுத்த மேல் சாதியினரின் அந்த கருணையற்ற செயல், மறுபடியும் காட்சியாக பத்து மடங்கு அழுத்தமான வண்ணங்களோடு அவன் கண்ணெதிரில் காட்சி தந்தது. 'தான் மட்டும் ஒரு புலையனாக இல்லாமல் வேறு ஏதாவது மட்டசாதியாக இருந்திருந்தாலும் தன் நீலன் பிழைத்துக் கொண்டிருப்பானோ' என்று தோன்றியது. "தெய்வத்துக்கும் வேண்டாத சாதி, பொலைய சாதி" என்று முனகிக் கொண்டான். "தன்ன மாதிரி ஆளுங்கள இந்த தெய்வம் எதுக்காகப் படைக்கணும்? இப்போ உசிரை எதுக்கு இப்படிப் பிழியணும்?" என்று முனகிக் கொண்டான்.”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
“ஏரியின் மேல் பகுதியிலிருந்தவர்கள் ஓடி வந்தனர். ஒரு பார்ப்பன இளைஞன் ஓடி வந்து நீலனை இழுத்துவர முன்னால் பாயப் போனான். அவனுடைய பெரியவர்கள் சட்டென்று அவனைப் பிடித்து தடுத்தனர். "அவன் புலையனில்லையா?" என்று தடுத்துப் பயமுறுத்தினர். இளைஞன் குழம்பிப் போய் நின்றுவிட்டான்.”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
“தன் குல தெய்வத்தை நம்பி தன் ஆசை கை கூடாதபோது, பாதிரிங்க தெய்வத்தை நம்பினாதான் என்ன தப்பு?”
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
― ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
