(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kota Shivarama Karanth

“மகன் குருவனைப் பார்க்கப் பயணம் புறப்பட்ட சோம, காலை வீசிப் போட்டு வேகமாக நடந்தான். அவனது குடிசையிலிருந்து எங்கே போவதாயிருந்தாலும் முதலில் ஒரு குட்டித் தேவதையின் கோயிலைத் தாண்டித்தான் போக வேண்டும். அது பஞ்சுர்லி பூதத்தின் கோயில். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் அங்கே நின்று தரையில் விழுந்துக் கும்பிட்டுவிட்டு புறப்பட்டு போவதுதான் அவன் வழக்கம். வழிகாட்டியைப் போல அவனுக்கும் முன்னால் போகும் சோமனின் நாய் சோணியும் கூட பஞ்சுர்லி கோயில் வந்தவுடன் தானாகவே நின்றுவிடும். சோம வந்து தரையில் விழுந்துக் கும்பிட்டு எழுந்து நின்ற பிறகுதான் அதுவும் அவனுக்கு முன்னால் புறப்பட்டுப் போகும். இன்றைக்கும் கூட கோயில் வந்தவுடன் சோணி நாயும் வழக்கம்போல் நின்றது. சோமனும் தன்னையறியாமல் தடுமாறி நின்று முழங்கால்களை பழக்கத்தின் காரணமாக மடித்து ஊன்றி நின்றான். இதயம் சூடேறியது. 'தான் பாதிரி மதத்துல சேரப் போறவன். இதுக்குமேல பஞ்சுர்லிக்கு முட்டி போடுவதா?' - என்ற எண்ணம் தோன்றியது! கால்களை நிமிர்த்தி எழப் பார்த்தான். முடியவில்லை. பஞ்சுர்லி பூதம் தன் எதிரில் நிற்பதாகத் தோன்றியது.

"சோமா... மீசை நரைக்கிற வரைக்கும் என்னையே நம்பி என் பக்தனா இருந்துட்டு, இப்போ, சாகிறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி, என்னை விட்டுட்டு, பாதிரி பின்னால போகப் போறியா?" என்று கேட்ட மாதிரி இருந்தது. அவன் உடம்பு சிலிர்த்தது.”

Kota Shivarama Karanth, ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi
Read more quotes from Kota Shivarama Karanth


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

1 like
All Members Who Liked This Quote



This Quote Is From

ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi ಚೋಮನ ದುಡಿ | Chomana Dudi by Kota Shivarama Karanth
1,053 ratings, average rating, 87 reviews

Browse By Tag