அம்மா வந்தாள் [Amma Vanthaal] Quotes

Rate this book
Clear rating
அம்மா வந்தாள் [Amma Vanthaal] அம்மா வந்தாள் [Amma Vanthaal] by Thi. Janakiraman
1,034 ratings, 4.09 average rating, 101 reviews
அம்மா வந்தாள் [Amma Vanthaal] Quotes Showing 1-5 of 5
“சமைக்கத்தான் தெரியுமோ? இல்லை, பாடசாலைப் பையன்களுக்கு என்றுதான் இப்படிச் சமைத்தானோ - குழம்பு, ரசம், எல்லாவற்றிலும் ஒரு புளிவேகம் அடிக்கும். பரிசாரகனின் கையே புளியால் செய்ததோ என்னவோ? அவன் தொட்டதெல்லாம் புளிப்பது போலிருக்கும். மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு, கொத்தமல்லி - இத்தனையும் உலகில் மண்டிக்கிடக்கிற பொழுது எப்படித்தான் இந்தப் புளி வாடையை அவன் கொண்டு வருகிறானோ! பாடசாலையைத் தவிர வேறு எங்குச் சாப்பிட்டாலும் மணமாகத்தானிருக்கும் பிள்ளைகளுக்கு”
Thi Janakiraman, Amma Vanthal
“காதில் பூரித்த வைரத்தோடு இடக் கன்னத்தின் மஞ்சளுக்கும், இறங்கித் தழைந்த கருமயிருக்கும்மேல் லேசாக ஒரு நீலத்தைத் தெளித்தது.”
Thi Janakiraman, Amma Vanthal
“கோமாளி வேடம் போடுகிறவன் பேசுவதைக் கேட்டு எல்லாரும் சிரிப்பார்கள். ஆனால் தனக்கு எல்லாருமாகச் சேர்ந்து கோமாளி வேடம் போட்டு - அவன் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக - அவர்களே அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அவனுக்கு”
Thi Janakiraman, Amma Vanthal
“ஒண்ணையும் புரிஞ்சுக்கச் சிரமப்படப்படாது. பேசாமல் பார்த்துண்டேயிருக்கணும். அதுக்காகத்தான் ஸ்வாமி நம்மைப் படைச்சிருக்கார்.”
Thi Janakiraman, Amma Vanthal
“பாடம் சொல்லிக்கொடுக்கிறவன், சொல்லிக்கிறவன் இரண்டு பேரையும் பரமாத்மாதான் காப்பாத்துறான். இரண்டு பேருக்குள்ளேயும் மனஸ்தாபம், துவேஷம் இருக்கப்படாது”
Thi Janakiraman, Amma Vanthal