“கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி இவ்வாறு பிரகடனப்படுத்துகிறான்:
கடந்த காலங்களில், இப்படியான நடைமுறை இருந்ததில்லை: எந்த நேரத்திலும் கவனம்செலுத்த வேண்டிய விவகாரங்கள் அல்லது தொடர்புடைய விஷயங்களைக் கவனத்துக்குக் கொண்டுவருவது. ஆனால், நான் இவ்வாறு செய்திருக்கிறேன்.
எந்த நேரத்திலும் — நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், என்னுடைய இருப்பிடத்தில் இருந்தாலும், என்னுடைய அந்தப்புரத்தில் இருந்தாலும், பண்ணையில் இருந்தாலும், வண்டியில் இருந்தாலும் அல்லது பூங்காவில் இருந்தாலும் — எந்த இடத்தில் இருந்தாலும், மக்கள் விவகாரங்கள் குறித்துத் தகவலாளர் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் இருந்தாலும், மக்கள் விவகாரங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன்.
மேலும், வாய்மொழியாக நான் என்ன கட்டளையிட்டாலும், அது தானம் கொடுப்பது அல்லது பிரகடனப்படுத்துவது குறித்ததாக இருந்தாலும் அல்லது மஹாமாத்ரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு தொடர்பான அவசரச் செய்தியாக இருந்தாலும் — இப்படியான விஷயங்கள் குறித்து சபையில் முரண்பாடுகள் அல்லது விவாதங்கள் நடந்தால், அது குறித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் என்னிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இப்படியாக, நான் கட்டளையிடுகிறேன்.
தீவிரமாக முயல்வதிலும் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் நான் எப்போதும் மனநிறைவடைவதில்லை. ஏனெனில், மக்கள் எல்லோருடைய நலன்களையும் என்னுடைய பொறுப்பாகப் பார்க்கிறேன். இதற்கான வேர், மீண்டும், தீவிரமாக முயல்வதிலும் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும்தான் உள்ளது. மொத்த உலகின் நலனுக்காக உழைப்பதைவிட முக்கியமான காரியம் என்று எதுவும் இருக்க முடியாது.
நான் என்ன அரும்பாடுபட்டாலும், அதெல்லாம் இதற்காகத்தான்: ஜீவராசிகளுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வது; அவற்றின் நலன்களுக்காக இந்த உலகத்தில் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும்; இப்படியாக அடுத்ததில் அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
இப்போது, இந்த நோக்கத்துக்காக தர்மம் குறித்த இந்த எழுத்து இங்கே பொறிக்கப்படுகிறது: இது காலங்காலமாக நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக, என்னுடைய மகன்களும் பேரன்களும் மொத்த உலகின் நன்மைக்காக முயற்சியெடுப்பார்கள். ஆனால், அரும்பாடுபடாமல் இதைச் சாதிப்பது உண்மையிலேயே கடினமான காரியம்தான்.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle109 ratings, average rating, 27 reviews
Open Preview
Browse By Tag
- love (101878)
- life (80007)
- inspirational (76392)
- humor (44541)
- philosophy (31216)
- inspirational-quotes (29058)
- god (26991)
- truth (24854)
- wisdom (24811)
- romance (24495)
- poetry (23470)
- life-lessons (22768)
- quotes (21228)
- death (20647)
- happiness (19109)
- hope (18679)
- faith (18527)
- inspiration (17560)
- spirituality (15837)
- relationships (15753)
- life-quotes (15665)
- motivational (15551)
- religion (15450)
- love-quotes (15425)
- writing (14992)
- success (14233)
- travel (13648)
- motivation (13479)
- time (12914)
- motivational-quotes (12674)
