(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“அசோகரது ஐக்கியவாதம் காணாமல்போனதை, பார்ப்பனிய மற்றும் பௌத்த மரபுகள் ஒரு 'லட்சிய' அரசனைச் சித்தரிக்கும் முயற்சிகளில் காண முடிகிறது — ஒன்று, இவை வெளிப்படையாக அசோகருக்கு மாற்றானதை முன்வைத்தன அல்லது அவரைப் போலவே வடிவமைத்தன. இரண்டு, பார்ப்பனிய சம்ஸ்கிருதக் காவியங்களான மகாபாரதமும் ராமாயணமும் யுதிஷ்டிரன், ராமன் ஆகிய இரண்டு லட்சிய அரசர்களை முன்வைக்கின்றன. இருவருமே தர்மத்துக்கு உட்பட்டு ஆட்சிபுரிகிறார்கள்; இருவருமே பார்ப்பனர்களுக்கும் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் தலைமை பீடத்தில் பார்ப்பனர்களை வைத்து, அவர்களுடைய அறிவுரைகளுக்கு ஏற்ப ஆட்சிபுரிந்தார்கள். இவ்விரண்டு நீண்ட காவியங்களும் அசோகரது பெயரை ஒருபோதும் முன்மொழியவில்லை. ஒருசில புராணங்களில் அரசர்களின் பெயர்களைப் பட்டியலிடும்போது குறிப்பிடுவதைத் தவிர, பார்ப்பனிய மரபு ஏறக்குறைய வரலாற்றுரீதியான நினைவுகளிலிருந்து அசோகரை அப்புறப்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், சமீபத்திய ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுவதுபோல், அசோகருக்கு ஒரு மாற்றாகவே யுதிஷ்டிரர் நிற்கிறார் — மௌனமான, ஆனால் சொல்திறன்மிக்க மாற்றாக. மகாபாரத அறிஞரான மாடெலின் பியர்தியூ மகாபாரதப் படைப்பானது அசோகரோடு நெருங்கிய தொடர்புகொண்டது என்று பலமாக வாதிடுகிறார்: 'அசோகர் மதம் மாறியதற்கும் மகாபாரதம் இயற்றப்பட்டதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே எங்களுடைய அடிப்படை முற்கோளாகக் கொண்டிருந்தோம்.' இந்தியக் காவியங்கள் குறித்த அறிஞரான ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட், வரலாற்றுரீதியான அசோகருக்கும், 'பிரம்மன்யாவாக', அதாவது பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு லட்சிய அரசனை நோக்கமாகக் கொண்டு பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட இலக்கியப் பாத்திரமான யுதிஷ்டிரருக்கும் இடையேயான ஒப்புமையை மிக வலிமையாக முன்வைக்கிறார்:

'நீண்ட காலமாக யுதிஷ்டிரன்... புதிய சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கும் உலகம் குறித்துப் புதிய தரிசனத்தை மற்றவர்களுக்கு அளிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் இறையியல்-தத்துவார்த்த இலக்கிய ஆளுமையால் வடிவமைக்கப்பட்ட இலக்கியப் படைப்பு என்பதே என்னுடைய நீண்ட காலப் பார்வையாக இருந்துவருகிறது. பேரரசர் அசோகரை மறுதலிப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் மாற்றுப் பார்வையை முன்வைப்பதற்காகத்தான் யுதிஷ்டிரன் என்ற பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை நான் பல வருடங்களாகக் கொண்டிருக்கிறேன்.'

பார்ப்பனர்களைப் பொறுத்தமட்டில், லட்சிய அரசன் என்பவன் — அசோகர்போல் அல்லாமல் யுதிஷ்டிரன்போல் பார்ப்பனர்களின் நலன்களுக்கும் அவர்களது மேலாண்மைக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்பவனாக இருக்கிறான் என்றால், பௌத்தர்களைப் பொறுத்தமட்டில், அப்படியான அரசன் பௌத்தத்துக்கும் சங்கத்துக்கும் முற்றிலும் விசுவாசமாக இருக்கும் அசோகரைப் போன்றவனாக இருக்கிறான்.”

Patrick Olivelle, Ashoka: Portrait of a Philosopher King
Read more quotes from Patrick Olivelle


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

Ashoka: Portrait of a Philosopher King Ashoka: Portrait of a Philosopher King by Patrick Olivelle
109 ratings, average rating, 27 reviews
Open Preview

Browse By Tag