“அசோகர் பௌத்தத்திலிருந்தும் பௌத்தத் துறவிகளோடு அவர் ஊடாடியதிலிருந்தும் உந்துதல் பெற்றிருந்ததால், தர்மம் குறித்த அவரது சொந்த வரையறையில் பௌத்தக் கருத்தாக்கங்களின் ஒருசில கூறுகளையாவது உள்ளடக்கியிருப்பார் என்றே நாம் எதிர்பார்ப்போம். அசோகர் ஏன் ஐந்து பௌத்தக் கட்டளைகளை தர்மம் குறித்த அவரது வரையறையின் பகுதியாக்கவில்லை என்ற கேள்வியை இயல் 7-இல் நான் எழுப்பியிருந்தேன். பஞ்சசீலா என்றழைக்கப்படும் இந்த ஐந்து கட்டளைகள் ஐந்து தடைகளை முன்வைக்கின்றன: (1) உயிரினங்களைக் கொல்லாமை, (2) கொடுக்கப்படாததை எடுத்துக்கொள்ளாமை, (3) பாலியல்ரீதியில் முறைதவறாமை, (4) பொய் சொல்லாமை அல்லது தவறாகப் பேசாமை, (5) போதைப்பொருட்கள் உட்கொள்ளாமை. முதலாவதாக இருப்பது மட்டுமே, அதாவது உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பது மட்டுமே தர்மம் குறித்த அசோகரது முன்வைப்புகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்றால், நான்காவது அதாவது உண்மையாக இருத்தல் என்பது போகிறபோக்கில் மூன்று முறை மட்டுமே வெளிப்படுகிறது.
பௌத்தர்கள், பார்ப்பனர்கள் இருசாராருமே மது அருந்துவதைத் தீவிரமாக எதிர்த்தார்கள். அக்காலகட்டத்தில் மதரீதியான அறத்தில் மது அருந்தாமை பிரதானக் கூறாக இருந்தது. பார்ப்பனியச் சட்ட விதிகள் போன்ற சில பனுவல்களில், மது அருந்துவதற்கு எதிராகக் குற்றவியல் தடைகளும் காணப்படுகின்றன. இதற்கு எதிர்முனையில், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், மது அருந்துவதை அரசியல்ரீதியாக, நிர்வாகரீதியாக அணுகுவதை வெளிப்படுத்துகிறது. இதில், மது பொதுவாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகவும் இருந்ததைக் காண முடிகிறது. மேலும், அது பெருமளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தது. எது நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று எப்போதும் அரசர்கள் அறிந்திருந்தார்கள். சில நவீன அரசுகள்போலவே, தனியார் மது தயாரிப்பதை, விநியோகிப்பதை, விற்பதை ஒருசில திருவிழா நாள்கள் தவிர பிற நாள்களில் தடைசெய்தார்கள். திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் மது தடையற்றுக் கிடைத்தது. நாம் முன்னர் பார்த்தது போன்று திருவிழாக்களை ஏற்றுக்கொள்ள அசோகர் மறுக்கிறார். இருந்தும், மது அருந்தாமையை அசோகர் ஏன் அவரது தர்மத்தின் பகுதியாக முன்வைக்கவில்லை?
முறையற்ற பாலியல் நடத்தைகள் விஷயத்திலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். சில அறரீதியான முறைமைகளில் மது அருந்துவதைவிடப் முறையற்ற பாலியல் நடத்தைகள் இன்னும் தீவிரமான குற்றமாகப் பார்க்கப்பட்டன. பாலியல் வன்முறை, கன்னிகழித்தல், முறையற்ற உறவுகளெல்லாம் இதன் கூறுகளாவதோடு, அவற்றுக்கான குற்றவியல் தண்டனைகளையும் கொண்டிருந்தன. பௌத்தத்துக்குள்ளும் பிற துறவற மதங்களுக்குள்ளும் துறவற வாழக்கையின் பிரதானக் கூறாக பிரம்மச்சரியம் இருந்தது. முறையான பாலியல் நடத்தையானது தார்மிகப் படிநிலையில் மேலான இடத்தைக் கொண்டிருந்தது. ஆக, முறையற்ற பாலியல் நடத்தைகளை அசோகர் ஏன் அவரது தர்மத்தின் பகுதியாக முன்வைக்கவில்லை?
இந்தக் கேள்விகளுக்கும் இவற்றுக்கு நிகரானவற்றுக்கும் அசோகரது எழுத்துகளில் தெளிவான விடை எதுவும் இல்லை. அவர் இந்தப் பிரச்சினைகளை எளிதில் கடந்துபோகிறார். ஒன்று, இவை குறித்து அவர் சிந்திக்கவில்லை என்று சொல்லலாம் அல்லது இவை குறித்து மௌனமாக இருக்க முடிவெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், ஏன்? அவரது எழுத்துகளின் தொகுப்பிலிருந்து விடைகளாக நாம் சில ஊகங்களைச் - ஓரளவு சாத்தியப்பாடு கொண்டவற்றைச் - சேகரிக்க மட்டுமே முடியும். முதலாவதாக, சிறு பாறை அரசாணை I-இல் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவது என்ற அவரது தொடக்க கால உந்துதலைக் கடந்து, மேலும் பொதுவான, உள்ளிணைத்துக்கொள்ளும் தர்மத்துக்கான புதிய கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்த பின், வெகுஜன மனதில் பௌத்தத்தோடு சுலபமாகவும் நெருக்கமாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய எது ஒன்றிலிருந்தும் - பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகள்போல்- விலகியிருக்க அவர் விரும்பியிருக்கலாம். நம்மால் இதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவியல் சட்டங்களைச் சேர்ப்பதற்கான அவரது தயக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது: தர்மம் என்பது மிகக் குறைந்தபட்சக் குறை எண்ணாக இருப்பதற்கான, வெறுமனே குற்றங்கள் எதிலும் ஈடுபடாத குடிநபர்த்தன்மையை உருவாக்குவதற்கான ஒன்றானது மட்டுமல்ல. அசோகரைப் பொறுத்தமட்டில் தர்மம் இதையெல்லாம் உள்ளடக்கியிருக்கிறது. ஆனாலும், இதையெல்லாம்விட மேலானதாகவும் இருக்கிறது.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle119 ratings, average rating, 30 reviews
Open Preview
Browse By Tag
- love (101798)
- life (80390)
- inspirational (76861)
- humor (44614)
- philosophy (31442)
- inspirational-quotes (29057)
- god (27018)
- truth (24940)
- wisdom (24900)
- romance (24555)
- poetry (23590)
- life-lessons (22804)
- quotes (21220)
- death (20695)
- happiness (19032)
- hope (18734)
- faith (18565)
- inspiration (17839)
- spirituality (15908)
- relationships (15804)
- motivational (15803)
- religion (15490)
- life-quotes (15444)
- writing (15025)
- love-quotes (14968)
- success (14214)
- motivation (13773)
- time (12951)
- motivational-quotes (12235)
- science (12203)
