(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“பொழுது இடை தெரியின் பொய்யே காமம்.” அன்னூர் நன்முல்லை. யார் அவள்? யாருக்காகக் காத்திருந்தாள்? இடைதெரியா காலத்தில் ஒரே நினைவு மட்டுமாக. அவன் என்னவானான்? அவளை விட்டு விட்டானா? ஒரு நரம்பு அறுந்து சுருண்டு துடிப்பதுபோல என் உள்ளம் வலித்தது. அவள் கைவிடப்பட்டிருப்பாள். சந்தேகமே இல்லை. உக்கிரமான காதல் புறக்கணிக்கப்படவேண்டும். ஏனெனில் அதற்கு பூமியில் இடமில்லை. சாந்தியடையாத பேய் போல அது பாறைகளில் மரங்களில் முட்டி மோதிக் காட்டில் அலைய வேண்டும். அன்னூர் நன்முல்லை தன் மண்டையை ஒரு பெரும் பாறையில் மோதி உடைத்தாள். அதை நான் பார்த்தேன். உடைந்த முட்டை போல அவள் மூளை வழிந்து கிடந்தது. அதிலிருந்து கிளம்பிய அவளுடைய காதல் சாந்தியே இன்றி நூற்றாண்டுகளாகக் குறிஞ்சியின் அடர்ந்து இருண்ட காட்டில் அலைந்தது. காட்டை பீதியுடன் பார்த்தேன். இந்த ஒவ்வொரு மரமும் ஒரு துயரம் கப்பிய பாடல். ஒரு கைவிடப்பட்ட ஆத்மா. ஒரு நிறைவேறாத பிரியம். ஒவ்வொரு மலரும் உதிர்வதற்கென்றே பூத்த ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு கனியும் உண்ணப்படாத இனிமை.”

Jeyamohan, காடு [Kaadu]
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

காடு [Kaadu] காடு [Kaadu] by Jeyamohan
705 ratings, average rating, 48 reviews

Browse By Tag