“இப்ப அவனுக்குப் பேய் பத்திய பயமெல்லாம் இல்ல. ராத்திரி பஸ்ட் ஷோ பாத்திட்டு வர்றவங்களும் சரி, செகண்ட் ஷோ பாக்கப் போயிட்டு நடுச்சாமந்தாண்டி வர்றவங்களும் சரி, தனியா வரமாட்டாங்க. பேயி பயந்தான். ரெண்டு மூணு பேராச் சேந்துதாம் போவாங்க வருவாங்க. சிலுவைக்கு ஒண்ணு டெய்லர், இல்லாட்டா ஒத்தையில போறதுதான் பிடிக்கும். ராத்திரி ரொம்ப நேரமாகவும், பகல் கொஞ்ச நேரமாகவும் இருந்தா நல்லதுன்னு நெனப்பான். கம்மாக்கரை வரப்பு வழியா நட்சத்திரங்கள் சிந்திக்கிடந்த வானத்தின் கீழ் தனியாக நடந்துபோவது அவனுக்கு சுகமான அனுபவம். யாராச்சும் வாராங்களா அவங்ககூட பயமில்லாமப் போகலாம்னு காத்து நிற்கும் மனுசனப் பாத்தாலே சிலுவைக்கு ஆகாது. யாருக்கு யார் பாதுகாப்பு? அப்பத்தான் கொல்லைக்கு வந்தவம் மாதிரி சிலுவை கரையோரமாப் போயி குத்தவச்சுக்கிருவான். அந்த மனுசம் போற வரைக்கும் எந்திரிக்க மாட்டான். அவனும் பொறுத்துப் பொறுத்துப் பாத்திட்டு, 'அண்ணாச்சி வத்ராப்புக்குதான போறீக'ன்னு ரொம்பப் பழகுன ஆள் மாதிரி விசாரிப்பான்.
'இல்ல'ங்கிறதுக்கு மேல ஒரு வார்த்த சிலுவை பேசமாட்டன். அந்த ஆளு நிண்ணு பாத்திட்டு வீட்டுக்குத் திரும்பிருவான். அவம் போனப் பெறகு சிலுவை வத்ராப்புப் பாக்கத் தனியா நடந்து போவான். மனுசங்கள நடுங்க வைக்கிற பேய்க வந்தாக்கூட அதுகளுக்கு கம்பெனி குடுக்க சிலுவை தயார். மனுசங்களுக்குக் குடுக்கத் தயாரில்லை. சிலுவை போறதப் பாத்திட்டுப் பேய்ககூட ஒரு வேள பயந்தாலும் பயப்படும்!”
―
சிலுவைராஜ் சரித்திரம்
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101793)
- life (79803)
- inspirational (76208)
- humor (44484)
- philosophy (31156)
- inspirational-quotes (29021)
- god (26979)
- truth (24825)
- wisdom (24769)
- romance (24459)
- poetry (23421)
- life-lessons (22741)
- quotes (21217)
- death (20620)
- happiness (19111)
- hope (18645)
- faith (18510)
- travel (18059)
- inspiration (17470)
- spirituality (15804)
- relationships (15739)
- life-quotes (15659)
- motivational (15451)
- religion (15435)
- love-quotes (15433)
- writing (14982)
- success (14222)
- motivation (13352)
- time (12904)
- motivational-quotes (12658)

