“காரைக்காலிலிருந்து வீடு வந்து சேர்ந்த சிலுவைக்கு அவனுடைய அம்மையின் வசவுகளும், தகப்பனின் எச்சரிக்கைகளும் பரிசுகளாகக் கிடைத்துக் கொண்டிருந்தன. தனிமைப்பட்டுப்போய் வீட்டுக்குள்ளேயே கொஞ்ச நாள்களாக முடங்கிக்கிடந்தாள். அவனிடம் இருந்த என்சிபிஹெச் சோவியத் நூல்களும், எம்.ஏ. படிச்சபோது வாங்கி வச்ச புஸ்தகங்களும், வத்ராப் நூலகத்தில் டோக்கனில் வாங்கிய ரெண்டு புஸ்தகங்களும் இருந்ததால் பைத்தியம் பிடிக்காமலிருந்தது. கார்ல்மார்க்சின் மூலதனம், அவரும் பிரடெரிக் ஏங்கல்சும் சேர்ந்து எழுதிய நூல்கள், கார்க்கியின் சுயசரிதைகள், சிறுகதைகள், செகாவ் கதைகள், கோகோல், துர்க்கனேவ், தாஸ்தாவ்ஸ்கி நாவல்கள் சில வாங்கியிருந்தான். நாலு மாசம் காரைக்காலில் வேலை பார்த்த பணத்தில்தான் வாங்கினான். புஸ்தகங்களைத் தவிர பேச்சுத்துணைக்கு யாருமில்லை. அவனும் அம்மையும் அந்த ஒரே வீட்டுக்குள் நடமாடினாலும் அந்நியர்களாத்தான் இருந்தார்கள். சிலுவை கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களோட சேந்துகிட்டு வத்ராப்ல திரிகிறதாகவும், அம்மையத் திட்டுகிறதாகவும் அவனப் பற்றி அந்தத் தெருவிலிருந்த முகம் தெரியாத உளவாளிகள் தகப்பனுக்குத் தொடர்ந்து கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியதால், இந்தியக் குடியரசைக் காப்பாற்றுவதாக நம்பிய அவர் சிலுவைக்கு மாசாமாசம் அனுப்பி வந்த முப்பது ரூபாயை நிறுத்தியதோடு, சீக்கிரம் வேலை தேடிப் போகாவிட்டால், தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று எச்சரித்துக் கடிதம் போட்டார்.”
―
சிலுவைராஜ் சரித்திரம்
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101793)
- life (79803)
- inspirational (76208)
- humor (44484)
- philosophy (31156)
- inspirational-quotes (29021)
- god (26979)
- truth (24825)
- wisdom (24769)
- romance (24459)
- poetry (23421)
- life-lessons (22741)
- quotes (21217)
- death (20620)
- happiness (19111)
- hope (18645)
- faith (18510)
- travel (18059)
- inspiration (17470)
- spirituality (15804)
- relationships (15739)
- life-quotes (15659)
- motivational (15451)
- religion (15435)
- love-quotes (15433)
- writing (14982)
- success (14222)
- motivation (13352)
- time (12904)
- motivational-quotes (12658)

