(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“அந்த வருசம் காட்டாண்டி பேரனுக்கு என்ன வந்துச்சுனு தெரியல. கூட்டத்துல அவம் மட்டும் ரொம்ப வித்தியாசமாகத் திரிஞ்சாம். தலயில குளுகுளுன்னு தேச்ச தேங்காய் எண்ண மூஞ்சி செவுளெல்லாம் வடிஞ்சி ஆள் கரேர்னு தெரிஞ்சாம். டியூப் லைட் வெளிச்சத்துல அந்த மூஞ்சி 'பளிச்'னு மின்னுச்சு. அவன் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன் என்பதால் அவரைப்போல வெள்ளை பேண்டும் சட்டையும் போட்டு இடுப்புல கருப்பு பெல்ட் கட்டிக் கூலிங்கிளாசோடு வந்தான். ரெண்டு கைகளையும் மறக்காமல் பேண்ட் பாக்கெட்டுக்குள் செருகியிருந்தான். இம்புட்டுத் தூரம் டிரஸ் பண்ணிய பெயலுக்குச் செருப்புப் போட்டுக்கிடணும்னு தோணல. எங்கடா பேண்டு தச்சுன்னு கேட்டா சேம்ஸ்சு நாடார்கிட்டன்னு பெருமையாச் சொன்னான். அவருக்கு டவுசர் தச்சுத்தான் பழக்கம். டவுசரைக் கீழ வரைக்கும் நீட்டிவிட்டால் போச்சு என்ற நினைப்பில் பேண்ட் தச்சிருப்பாராக்கும்! பகல்லதாம் கூலிங்கிளாஸ் போடுவாங்கன்னா இவம் ராத்திரிக்காணு போட்டுக்கிட்டுத் திரியிறது சிரிப்பா இருந்துச்சு, எங்க வாங்கியிருப்பாம்? செக்கடி பஜார் கடைகள்ல அது கெடையாது. சீல்தூர்லதாம் வாங்கியிருக்கணும். இதுக்காக மெனக்கிட்டு சீல்தூர் வரைக்கும் பஸ் பிடிச்சுப் போயிருக்காம் பாரு! அடிக்கடி பீடி பத்தவச்சுப் புகைய இழுத்து இழுத்து சிகரெட் ஊதுற மாதிரி ஊதினான்.

அவனப் பாத்த பெயக மட்டுமில்ல ஊர்ப்பெரியவங்ககூடச் சிரிச்சாங்க. அவனுக்கு இதப் பத்தியெல்லாம் கவலை கெடையாது. எம்ஜிஆர்னு பெயலுக்கு நெனப்பு!

இங்க பார்ரா நம்ம காட்டாண்டிபேரம் பேண்டு போட்டிருக்காம் என்று பெரிசுகள் ரெட்டை அர்த்தத்தில் லந்து பண்ணினார்கள். ஒரு மாசமா கூலி வேலைக்கிப் போயி ஒரு சல்லிக்காசுகூட வீட்டுக்குத் தராம இப்பிடிக் கிறுக்குப்பிடிச்சு அலைவதாகப் பேசிக்கொண்டார்கள். சிலுவைக்கு அவனைப் பார்ப்பதே பெரிய பொழுதுபோக்காக இருந்தது.”

ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag