(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
ராஜ் கௌதமன்

“ஒருதடவை கிறிஸ்மஸ் சீசனில் செயற்கையாய் அலங்கரிக்கப்பட்ட மாட்டுத் தொழுவில் வைக்கப்பட்டிருக்கும் குழந்தை ஏசுவை ஆராதித்துப் பாடும்போது ஸ்டீபன் செய்த கூத்து கோவிலையே ஒரு கணம் அதிரவைத்துவிட்டது. சோலோ-கோரஸ் என்று தொடர்ந்து போகும் அந்த ஆராதனையில் ஸ்டீபன் சோலோ பாட மற்றவர்கள் 'வந்தாராதியுங்கள்' என்று கூட்டாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

'ஏவை மரி கனியை'

'வந்தாராதியுங்கள்'

'மாட்டுக் கொட்டில் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வானோ போற்றும் பாலனை'

'வந்தாராதியுங்கள்'

'வயித்தால போன பாலனை'

'வந்...'

ஒரே சிரிப்பு. கோயில் அதிர்ந்தது. குழந்தை ஏசு மட்டும் சிரிக்காமல் படுத்துக்கிடந்தார். வெளியே வந்த பிறகு 'ஏண்டா இப்பிடிப் பாடுன' என்று அவங்கிட்ட சிரிப்பு தாங்காமல் கேட்டபோது, 'ஏன் அவருக்கு மட்டும் வயித்தால போயிருக்காதா? அவரும் மனுசந்தானே? மனித சுபாவத்தில் சிலுவையில் அறையப்பட்டுச் செத்துப் போனவர், வயித்தால போகாமலா இருந்திருப்பார்?”

ராஜ் கௌதமன், சிலுவைராஜ் சரித்திரம்
Read more quotes from ராஜ் கௌதமன்


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

1 like
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag