(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Satinath Bhaduri

“திரும்பத் திரும்ப ஏன் நீலுவின் நினைவு வருகிறது. நான் ஏதோ ஒன்றை மறக்கப் பார்க்கிறேனே, அதனாலா? சில நாட்களாக எனக்கு நானே வேண்டுமென்று திரும்பத் திரும்ப எதைச் சொல்லிக் கொண்டிருக்கிறேனோ அதை என் உள்மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. உண்மையில் எனக்கு எதிராகச் சாட்சி சொன்னதால் நீலு தன் கடமையைத்தான் செய்தான் என்பது எனக்குத் தெரியும். தன்மானமுடைய, உண்மை நெறியைக் கடைப்பிடிக்கும் அரசியல் தொண்டனுக்கு வேறு எவ்விதமான வழியும் இல்லை. இது வறட்டு வாதம். வற்றி, உலர்ந்துபோன இதயம் இந்த வாதத்தை ஒத்துக்கொள்ளலாம். ஒருவேளை கோர்ட்டில் செல்லுபடியாகலாம். புத்தகத்தில் படித்தால் நியாயமாகக் கூடத் தோன்றலாம். ஆனால், வேறு எந்த இடத்திலும் இதற்கு இடமில்லை. இல்லாவிட்டால் நீலுவின் நினைவு சுற்றிச் சுற்றி வருவானேன்? தான் சார்ந்த கட்சியிடம் அசையா விசுவாசத்தைக் காட்டுவதற்காக தனது உடன் பிறந்த அண்ணனையே தூக்கிற்கு அனுப்பும் தன்மை அவனது இதயத்தின் ஆரோக்கியத்தைக் காட்டுகிறதா அல்லது பிணியுற்ற மனத்தைக் காட்டுகிறதா? என்னால், என்னுள் இருக்கும் உண்மையான  என்னால், நீலுவின் இந்த நடத்தையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் பழைய நினைவுகள் என்ற தேனைத் தடவி, தகிக்கின்ற மனவேதனையைச் சமனப்படுத்திக்கொள்கிறேன் போலும்.”

Satinath Bhaduri, জাগরী
Read more quotes from Satinath Bhaduri


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

জাগরী জাগরী by Satinath Bhaduri
240 ratings, average rating, 51 reviews

Browse By Tag