(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kudavayil Balasubramanian

“சந்தியாநிருத்த மூர்த்தியின் வண்ணங்கள் தீட்டப்பெற்ற ஆடற்சிற்பம் மேற்கு வாயிலுக்கு எதிரே உள்ளது. இதனை அடுத்துத் தில்லையம்பலத்தில் மாமன்னன் இராசராசன் தன் தேவியருடன் பொன்னம்பலநாதனை வணங்கும் ஓவியக்காட்சி உள்ளது. பொன் ஓடுகள் வேயப்பெற்ற பொன்னம்பலம், தில்லைக் கோயிலின் நான்கு கோபுரங்களும், சேரநாட்டுக் கலைப்பாணியில் காணப்பெறுகின்றன.

சிறிய தாடி, மீசையுடன் வணங்கும் திருக்கோலத்தில் இராசராசனது உருவமும், மிக அழகிய ஆடை அணிகலன்களுடன் தேவியர் மூவர் உருவமும் உள்ளன. நடராசப் பெருமானது திருவடிகளுக்குக் கீழே காரைக்கால் பேயாரது திருவுருவமும், காளியின் உருவமும் உள்ளன. பொன்னம்பலத்தின் விதானத்தில் அழகிய தோரணங்களும் கொடிகளும் அழகுக்கு அழகூட்டுகின்றன. பல்வகைப்பட்ட பணியாளர்களின் உருவங்களும் தீட்டப்பெற்றுள்ளன. காவலர் சிலரது ஓவியங்களில், இடுப்பில் லங்கோடு எனும் இடுப்பாடையும், மேலே ஒரு பக்கக் கழுத்துப்பட்டை, இருபக்கக் கழுத்துப்பட்டைகளையுடைய (ஒன்சைடு காலர், டூ சைடு காலர்) சட்டையும் அணிந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது. இக்காட்சியில் சோழர்கால உடைகள், அணிகலன்கள், பொன்னம்பல அமைப்பு, பெருமன்னனின் உருவ அமைதி, அவர்தம் தேவியரின் பேரழகு ஆகியவற்றைக் காணமுடிகிறது.

இதற்கு எதிரிலுள்ள ஓவியப் பகுதியில் முதலாம் இராசராசன் சிவலிங்கத் திருமேனிக்கு முன்பு அமர்ந்தவண்ணம் வணங்கும் காட்சி சித்தரிக்கப் பெற்றுள்ளது. எடுப்பான மீசை, முடியிட்ட கொண்டை, பரந்த மார்பு உடையவனாகப் பாங்குடன் அமர்ந்து இராஜராஜேச்சரமுடையானை வணங்குகிறான். எதிரில் ஆடல் மகளிர் ஆட, அனைத்துப் பணியாளர்களும் சூழ்ந்து நிற்க, தேவியர் அமர்ந்திருக்க இக்காட்சி உள்ளது. இவ்வோவியம் சற்றுச் சிதிலமடைந்து காணப்பெறுவது மிகுந்த வருத்தமளிக்கின்றது. இராசராசனின் உருவ அமைப்பை அறிய இவ்வோவியம் உதவுகின்றது.”

Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
Read more quotes from Kudavayil Balasubramanian


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

தஞ்சாவூர் தஞ்சாவூர் by Kudavayil Balasubramanian
35 ratings, average rating, 4 reviews

Browse By Tag