(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Kudavayil Balasubramanian

“முதலாம் இராசராசன் மிக்ச்சிறந்த கலாரசிகன் என்பதை அவன் படைத்த இப்பெருங்கோயிலால் அறிகிறோம். அவனது கலைப்பித்து ஓவியக் கலையிலும் இருந்தது என்பதனை ஒரு கல்வெட்டு்ச் சான்றால் தெளிவாக அறிய முடிகிறது. உக்கல் எனும் ஊரில் காணப்பெறும் அவனது கல்வெட்டில் "ஸ்ரீராஜராஜதேவர் தஞ்சாவூர்ப் பெரியசெண்டு வாயில் சித்திரக்கூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளியிருந்து...." என்று கூறப்பெற்றுள்ளது. இதனால் இம் மன்னனின் அரண்மனை வாயிலை ஒட்டிச் சித்திரக்கூடம் ஒன்று இருந்ததை அறிகிறோம். அரண்மனை ஓவியக் கூடத்தில் சித்திரங்களைக் கண்டுகளித்த இம் மன்னவன் பெருங் கோயிலையும் சித்திரக் கோயிலாகவே படைக்கச் செய்தான். அவன் காலத்தில் அடியிலிருந்து முடிவரை இங்கே ஓவியங்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றோ இப்பெருங்கோயிலில் ஒரு கூடத்தில் மட்டுமே அக்காலத்து ஓவியங்களில் சில காணப்பெறுகின்றன.

இப்பெருங்கோயிலில் கருவறை இரு சுற்றுச்சுவர்களால் ஆனதையும் அதன் இடையே சாந்தாரம் எனும் சுற்றுக்கூடம் உள்ளதையும் முன்னரே கண்டோம். இரண்டு தளங்களிலும் இக்கூடங்கள் உண்டு. கீழ்த்தளத்தில் உள்ள சுற்றுக்கூடத்தில் கருங்கற்சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பெற்று அதன் மேல் ஓவியங்களை இராசராசனது ஓவியர்கள் தீட்டியுள்ளனர். பின்னர் இவற்றின் மீதே விசயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்பு பூசப்பெற்று ஓவியங்களைத் தீட்டி உள்ளனர். இதனால் சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர்கால ஓவியங்களால் மறைக்கப்பெற்றன. சென்ற நூற்றாண்டில் நாயக்கர் ஓவியங்களில் காரை பெயர்ந்த இடங்களில் சோழர் ஓவியங்கள் வெளிப்படுவதை பேராசிரியர் கோவிந்தசாமி என்பவர் கண்டு உலகுக்கு அறிவித்தார். பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் ஓவியங்கள் பலவற்றை அகற்றிப் பழைய ஓவியங்களை வெளிக்கொணர்ந்தனர். இப்பணி தொடர்ந்து நிகழ்கிறது. இச்சுற்றுக்கூடத்தில் மூன்றில் ஒருபங்கு ஓவியங்களே இதுவரை வெளிவந்துள்ளன.

தென்புறவாயில் வழியாக உள்ளே செல்வோமாயின் உருத்திரனின் மிகப்பெரிய சிற்பத்தைக் காணலாம். இதற்கு வலப்புறத்தில் உள்ள சுவர்ப்பகுதி முழுவதும் தரையிலிருந்து கூரைவரை சோழர்கால ஓவியங்கள் உள்ளன. இங்கிருந்து மேற்கிலும் வடக்கிலும் தொடர்ந்து ஓவியங்கள் பல வண்ணங்களில் தீட்டப்பெற்றுள்ளன.”

Kudavayil Balasubramanian, தஞ்சாவூர்
Read more quotes from Kudavayil Balasubramanian


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

தஞ்சாவூர் தஞ்சாவூர் by Kudavayil Balasubramanian
35 ratings, average rating, 4 reviews

Browse By Tag