“பகல் முழுக்க
யோசித்திருப்பேன்
அதைப்பற்றி.
இரவில் சொல்லிவிடுகிறேன் அதை.
எங்கிருந்து வந்தேன் நான்?
எதைச் செய்யவேண்டும் நான்?
பிடிபடவில்லை எனக்கு.
ஆனால் நானறிவேன்
எனது ஆன்மா வந்தது வேறெங்கோ இருந்து
அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்.
வேறேதோ மதுபான விடுதியிலிருந்து
பிறந்திருக்கிறது இந்தப் போதை,
நான் அங்கு மீளும்போது
முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்.
இப்போது
இந்த கூட்டில் அமர்ந்திருக்கும் நான்
வேறோர் நிலவுலகின் பறவை.
நான் பறந்து வெளியேறும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
ஆனால்
எனது குரலுக்கு
எனது காதினுள்
செவிமடுப்பவர் யார்?
எனது உதடுகள் வழி வருவது
எவரது வார்த்தைகள்?
எனது கண்கள் வழியே
பார்ப்பவர் யார்?
அந்த ஆன்மா எது?
கேட்காமலிருக்க முடியவில்லை
என்னால்.
பதிலின் ஏதோ சிறுதுளி
ருசிக்கக் கிடைத்தால் போதும் எனக்கு.
போதையுற்றவர்களின் இந்தச் சிறையை உடைத்துக்
கிளம்பிவிடுவேன்.
நானாக வரவில்லை இங்கு
திரும்பிச் செல்வதற்குமில்லை அப்படியே.
அழைத்து வந்தவரே
என்னைத் திரும்ப இட்டுச் செல்லட்டும்.
இந்த கவிதை.
என்ன சொல்லப்போகிறேன் என்று
ஒருபோதும் எனக்குத் தெரியாது.
திட்டமிட்டதுமில்லை.
அதைச் சொல்வதைத் தவிர்த்ததோர் வெளியில்
சஞ்சரித்திருப்பேன் நான்
மௌனமாக.”
―
தாகங்கொண்ட மீனொன்று
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101826)
- life (79936)
- inspirational (76333)
- humor (44514)
- philosophy (31200)
- inspirational-quotes (29046)
- god (26988)
- truth (24844)
- wisdom (24799)
- romance (24480)
- poetry (23457)
- life-lessons (22758)
- quotes (21219)
- death (20637)
- happiness (19106)
- hope (18666)
- faith (18519)
- inspiration (17536)
- spirituality (15828)
- relationships (15745)
- life-quotes (15660)
- motivational (15524)
- religion (15443)
- love-quotes (15420)
- writing (14987)
- success (14231)
- travel (13927)
- motivation (13448)
- time (12912)
- motivational-quotes (12671)

