“உனக்கு எது வேண்டுமென
அறியத் தவறினேன் நான்.
எனது வழித்தடத்தை அடைத்துவிடுகிறாய் நீ.
ஓய்வும் கொடுப்பதில்லை
ஒருபோதும் நீயெனக்கு.
என்னைச் செலுத்தும் கண்ணியை
ஒருவசத்தில் இழுக்கிறாய் நீ.
பிறகோ
மறுவசத்தில்.
எதுவும் நடவாதது போல
நடிக்கவும் தெரிகிறது உனக்கு,
எனது காதலே!
நான் சொல்வது
உனக்குக் கேட்கிறதா?
நான் பிதற்றித்திரியும் இந்த இரவு
முடியவும் கூடுமோ?
உன்னைப்பற்றி
ஏன் எனக்கின்னும்
தயக்கமும் கூச்சமும்?
பல்லாயிரங்களும் நீ.
ஒன்றேயாகி நிற்பதுவும் நீ.
அமைதி பூண்டபோதும்,
மிகத்தீர்க்கமாக வெளிப்படுத்துவதும் நீயே.
வசந்தம் உனது பெயர்
திராட்சைமது உனது பெயர்
மதுவின்
கிறக்கமும் மயக்கமும்
உனது பெயரே!
எனது மறைதிரையும் நீ.
கண்ணின் ஒளிச்சுடரும் நீ.
எங்கெங்கு காணினும்
உனது பிம்பமே!
இருப்பினும்
உன்னிடம் வந்தடையவே
ஏங்கித் தவிக்கிறேன் நான்.
எங்கு சிங்கத்தின் மீது
மான் பாய்கிறதோ,
எங்கு நான் தேடிக்கொண்டிருக்கும் ஒன்று
என்னைத் தேடுகிறதோ,
அங்கு வரக்கூடுமோ என்னால்?
முழங்கியபடியே இருக்கின்றன,
இந்த முரசும்
இந்த வார்த்தைகளும்!
தங்களது கவசங்களை
உடைத்துக்கொண்டு அவை
சிதறட்டும்
மௌனத்தினுள்.”
―
தாகங்கொண்ட மீனொன்று
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101826)
- life (79936)
- inspirational (76333)
- humor (44514)
- philosophy (31200)
- inspirational-quotes (29046)
- god (26988)
- truth (24844)
- wisdom (24799)
- romance (24480)
- poetry (23457)
- life-lessons (22758)
- quotes (21219)
- death (20637)
- happiness (19106)
- hope (18666)
- faith (18519)
- inspiration (17536)
- spirituality (15828)
- relationships (15745)
- life-quotes (15660)
- motivational (15524)
- religion (15443)
- love-quotes (15420)
- writing (14987)
- success (14231)
- travel (13927)
- motivation (13448)
- time (12912)
- motivational-quotes (12671)

