“சலிக்கவில்லை நீ எனக்கு.
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப்போகாதே.
நீர்க்குடுவை
நீர்க்கலயம்
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம் என்னால்.
தாகங்கொண்ட மீனொன்று
என்னுள் இருக்கிறது.
ஒருபோதும் கூடவில்லை அதற்கு
முழுத்தாகமும் தணிக்க.
கடலுக்கு வழி எது?
காட்டுங்கள் அதை எனக்கு!
உடைத்தெறியுங்கள்,
இச்சிறு குவளைகளை
அளந்து ஊற்றும் வீண் எத்தனங்களை.
மனமுயகத்தையும்
பெருந்துக்கத்தையும்கூட.
நெஞ்சின் மையத்தில்
யாருமறியா முற்றத்திலிருந்து
நேற்றிரவு எழும்பிய அலையில்
மூழ்கடிக்கப்படட்டும்
எனது வீடு.
ஒரு நிலவினைப்போல
எனது கிணற்றினுள் விழுந்தார் ஜோசப்.
அடித்துச் செல்லப்பட்டது
நான் காத்திருந்த விளைச்சல்.
ஆயினும்
அதுவொரு பொருட்டல்ல.
எனது கல்லறையின் மீது
மூண்டுள்ளது நெருப்பு.
படிப்பு
கௌரவம்
அல்லது மரியாதை
இவையேதும் வேண்டாம் எனக்கு.
இந்த இசை
இந்தப் புலரி
உன் கன்னக்கதுப்பு
எனக்களிக்கும் வெதுவெதுப்பு
இவைபோதும் எனக்கு.
துக்கித்திருப்போர்
பெரும் சேனைகளாகக் குழுமுவார்கள்.
நான் செல்லப்போவதில்லை
அவர்களோடு.
கவிதையை முடிக்கும்
ஒவ்வொரு தருணத்திலும்
இப்படித்தான் ஆகிறது,
மாபெரும் மௌனம்
என்மீது கவிகிறது.
வார்த்தைகளைப் பயன்படுத்த
ஏன் எண்ணினேன் என்ற
தவிப்பே எஞ்சுகிறது.”
―
தாகங்கொண்ட மீனொன்று
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (101826)
- life (79936)
- inspirational (76333)
- humor (44514)
- philosophy (31200)
- inspirational-quotes (29046)
- god (26988)
- truth (24844)
- wisdom (24799)
- romance (24480)
- poetry (23457)
- life-lessons (22758)
- quotes (21219)
- death (20637)
- happiness (19106)
- hope (18666)
- faith (18519)
- inspiration (17536)
- spirituality (15828)
- relationships (15745)
- life-quotes (15660)
- motivational (15524)
- religion (15443)
- love-quotes (15420)
- writing (14987)
- success (14231)
- travel (13927)
- motivation (13448)
- time (12912)
- motivational-quotes (12671)

