(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Periyar

“கோயிலில் போய் பூப் போட்டுக் கேட்கிறோமே - சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? நீ போய் தங்கையையும் அண்ணனையும் பூப் போட்டுக் கேட்டால் - இது வேண்டாம் என்று அந்தச் சாமி கூறுமா? ஒரு கழுதை பிறந்த நேரத்தை சாதகம் குறித்துக் கேட்டால், "இது கழுதையின் சாதகம்; வேண்டாம்" என்று கூறுமா? அம்மாள் - மகள் இருவருடைய பெயரையும் எழுதி அவர்களுடைய மகனுக்குக் கட்டலாமா என்று கேட்டால் அந்தச் சாமி என்ன செய்யும்? 'இருவருமே இலாயக்கில்லை' என்று கூறுமா? இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துவிடும் !

மற்றும் குருவி, கழுகுகளிடம் சோதிடம் பார்ப்பது என்பதெல்லாம் மிகவும் மடத்தனமான காரியமாகும். சாதகம், பொருத்தம், நல்ல நேரம் என்று பார்த்து நம்முடைய வசதியைக் கெடுத்துக்கொள்கிறோம். நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே - இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொளுத்த, இராகு காலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் 'இராமசாமி ! இராசாமி !' என்று கூப்பிட்டால், இவன், 'இப்போது இராகு காலம்; நான் வரமாட்டேன்' என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குடு குடு என்று - எங்கே சீக்கிரம் போகாவிட்டால் வழக்கைத் தள்ளிவிடப் போகிறானோ என்று ஓடிப்போய், 'வந்தேன் !' என்றுதானே கூறுவான்? அப்போது எங்கே போயிற்று இராகு காலம் ?

எமகண்டத்திலே இரயிலும் பஸ்ஸும் புறப்படுகிறது. 'கொஞ்சம் இரு; இப்போது இராகுகாலம்' என்று கூறினால் அது நிற்குமா ? அதில்தானே ஏறிச்செல்கிறான் ? இதையெல்லம் நன்றாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.”

Periyar, பெரியார் இன்றும் என்றும்
Read more quotes from Periyar


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag