“வெள்ளி பூசப்பட்ட பெரிய ஆடிகளை நகரின் ஆலயங்களின் சுற்றுவட்டங்களிலும் அங்காடிகளின் அருகிலும் தெருச்சந்திப்புகளிலும் நிறுவும்படி அவர் ஆணையிட்டார். அவற்றின் முன் மக்கள் கூடி தங்களை பார்த்துக்கொண்டனர். அதன்முன் பார்ப்பதற்கென்றே நல்லாடை அணிந்து அணிபூண்டு கிளம்பி வந்தனர். பின்னர் அவ்வழி செல்லும்போதெல்லாம் இயல்பாகப் பார்த்தனர். பின்னர் பார்ப்பதறியாமலேயே பார்க்கலாயினர்.
ஆண்கள் ஒவ்வொரு முறையும் அதை அணுகுகையில் தங்களைப் பார்த்து மீசையை முறுக்கி தலைப்பாகையை சரி செய்துகொண்டனர். எவரேனும் பார்க்கிறார்களா என்று சூழ நோக்கியபின் மீண்டும் நோக்கி பிரியாவிடை என அதை விட்டு அகன்றனர். பெண்டிர் பிறிதொரு பெண் வந்து அவளை உந்தி அகற்றுவது வரை ஆடி முன் கட்டுண்டிருந்தனர். தங்களைத் தாங்கள் முழுக்கவே பார்க்கவில்லை என்றே அவர்கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தனர். எவரும் இலாது சற்று பொழுது அவ்வாடிகள் ஓய்ந்திருக்குமெனில் புறாக்களும் காகங்களும் வந்து தங்களை பார்த்தன. எதிரியென எண்ணி பறந்து பறந்து கொத்தின. காதல் இணையென எண்ணி கொஞ்சி மொழிபேசி கொக்குரசிக்கொண்டன. புரவிகள் அவற்றில் தங்களைப் பார்த்து கனைத்து பிடரி சிலிர்த்தன. ஒருமுறை அரசநாகம் ஒன்று அதன்முன் படமெழுந்து நின்றாடுவதை அவன் கண்டான்.”
―
வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
by
Jeyamohan22 ratings, average rating, 1 review
Browse By Tag
- love (101812)
- life (79851)
- inspirational (76269)
- humor (44491)
- philosophy (31177)
- inspirational-quotes (29037)
- god (26984)
- truth (24834)
- wisdom (24779)
- romance (24470)
- poetry (23447)
- life-lessons (22747)
- quotes (21216)
- death (20631)
- happiness (19105)
- hope (18654)
- faith (18512)
- inspiration (17509)
- spirituality (15810)
- relationships (15743)
- life-quotes (15657)
- travel (15626)
- motivational (15495)
- religion (15438)
- love-quotes (15422)
- writing (14984)
- success (14229)
- motivation (13403)
- time (12908)
- motivational-quotes (12666)
