(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“களம் முழுக்க பீமனை இழுத்துச் சுழற்றி அலைக்கழித்த பின்னர் வில்லை உதறி அவனை அப்பால் வீழ்த்தினான் கர்ணன். அம்பால் சுட்டி “இழிபிறப்பே, காட்டுவிலங்கை களத்தில் கொல்வது நெறியல்ல என்பதனால் மட்டுமே உன்னை இன்று கொல்லாமல் விடுகிறேன். இனி எந்த வில்லவன் முன்னும் ஆணவத்துடன் எழாதொழிக உன் வில்! நீ கொண்டிருக்கும் உயிரென்பது இந்தச் சூதனின் கொடையென்று என்றும் உணர்க! சூதனின் எச்சில் தின்று வளர்த்த உடம்பு இதென்று அன்னத்தை கையிலெடுக்கும் ஒவ்வொரு கணமும் இனி நீ அறிக! செல்”! என்றான்.

பீமன் கைகளை விரித்து மண்ணில் முழந்தாள் மடித்து மண்டியிட்டு “கொல்! என்னை கொல்! இழிமகனே, என்னை கொல்!” என்று கூவினான். “உன்னைக் கொன்றால் என்னால் கொல்லப்பட்ட மதிப்பை உனக்களித்தவனாவேன். என் கொடையினூடாக எவரும் சிறுமைப்படலாகாதென்று இதுவரை எண்ணியிருந்தேன். இன்று அறிகிறேன், கொடுப்பவனின் தருக்கை. செல்க, என் கையிலிருந்து உயிர்பெற்று மீண்ட இரவலனாக உன் குடியினரிடம் செல்க!” என்றபடி தன் தேரைத் திருப்பி பின்னால் சென்றான் கர்ணன். திகைப்புடன், கண்களில் வழிந்த நீருடன் உடல் நடுங்கிக்கொண்டிருக்க விரித்த இரு கைகளும் காற்றில் அலைபாய கர்ணனை நோக்கி அமர்ந்திருந்தான் பீமன்.”

Jeyamohan, வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag