(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
மயிலை சீனி. வேங்கடசாமி

“காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இவ்வாறு சிவபெருமானாலே போற்றப்பட்ட ஒரு நூல் ஏன் வழக்காறற்றுவிட்டது? தமிழ்மரபுக்குப் புறம்பான நூலைத் தமிழர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளார். வீரசோழியம் வடநூல் மரபைத் தழுவி எழுதப்பட்டது. முக்கியமாக யாப்பிலக்கணம் பெரிதும் வடமொழிச் சார்பாக இருக்கின்றது. அன்றியும், இது எதிர்நூல். இது எதிர் நூல் என்பதை  ' ஆரவார விலக்கணநூ லைந்துமுழங்க வதற்கெதிர்நூல்
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே '  என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”

மயிலை சீனி. வேங்கடசாமி (Mayilai Seeni Venkatasamy), பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
Read more quotes from மயிலை சீனி. வேங்கடசாமி


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!



Browse By Tag