(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Jeyamohan

“எல்லாம் ஒழுங்கா நடந்திட்டிருக்காடே?” என்றேன்.

“ஒருகுறையில்லை. இதுவரை சர்வமங்களம்” என்று அவன் சொன்னான்.

“ஆமா, இதுவரை” என்று நான் சொன்னேன்.

“அது என்ன பேச்சு உடையதே? இதுவரை நடத்தித் தந்த அம்மை இனி நம்மை கைவிடுவாளா?”

“அதில்லடே” என்றேன். “நான் மூணு யுத்தம் நடத்தியிருக்கேன். பத்திருபது உத்சவங்கள் நடத்தியிருக்கேன். நாலு கோட்டை கட்டியிருக்கேன். இப்டி மானுஷ யத்னங்கள் நடக்கிறப்ப நமக்கு ஒரு கர்வபங்கம் கண்டிப்பா உண்டு. பாத்துப்பாத்துச் செய்வோம். ஆனா கண்ணுக்கு முன்னாடி எதையோ காணாம விட்டிருப்போம். நான் நான்னு நினைச்சு நிமிருற நேரத்திலே சரியா அது வந்து பூதமா முன்னாலே நின்னுட்டிருக்கும். நம்மளைப் பாத்து இந்த பிரபஞ்சம் சிரிக்கிறதுதான் அது. நீ என்னடே மயிரு, சின்னப்பூச்சி, நான் ஏழுகடலும் ஒற்றைத் துளியா ஆகிற பெருங்கடலாக்கும்னு சொல்லுது அது… சரி பாப்போம்.”

“ஒண்ணும் நடக்காது” என்று அவன் சொன்னான்.

”நடக்கும். என்னமோ நடக்கும். கண்டிப்பா நடக்கும். நடக்காம இருக்கவே இருக்காது. அதைத்தான் பாத்திட்டிருக்கேன். நான் தெய்வத்தை தேடுறது அங்கேயாக்கும். ஒரு தப்பு, அதிலேயாக்கும் தெய்வம் முகம் காட்டுறது” என்றேன்.”

Jeyamohan, குமரித்துறைவி
Read more quotes from Jeyamohan


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

குமரித்துறைவி குமரித்துறைவி by Jeyamohan
160 ratings, average rating, 15 reviews

Browse By Tag