More on this book
Community
Kindle Notes & Highlights
ஒரு இந்துவுக்கு தர்மம் என்பது பல ஏவல் கட்டளைகளும் தடைக் கட்டளைகளுமே ஆகும்.
வேதங்களில் தர்மம் என்ற சொல் பெரும்பாலும் மதக் கட்டளைகளையும் சடங்குகளையும் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியான வகுப்பு ஒழுக்கமுறையே. இப்படி கட்டளைகளின் தொகுப்பாக அமைந்துள்ள ஒன்றை நான் மதம் என்று மதிக்க மாட்டேன்.
லட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைகளுக்கு இணங்க நடப்பதே வாழ்க்கை ஆகி விடுகிறது.
எல்லாவற்றிலும் பெரிய தீமை, அந்தச் சட்டங்கள் நேற்றும், இன்றும், இனி எப்போதும் மாறாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. இவை ஒரு வகுப்புக்கு இருப்பது போல இன்னொரு வகுப்புக்கு இல்லை என்பது இவற்றில் காணப்படும் அநீதி. எல்லாத் தலைமுறைகளுக்கும் இதே சட்டங்கள்தான் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதால் இந்த அநீதி நிரந்தரமாகிறது.
இம்மாதிரி ஒரு சட்டத்தை எடுத்து வைத்து மக்களிடம் அதை மதம் என்று பொய்ப் பெயர் சூட்டியிருக்கும் முகமூடியைக் கிழித்தெறிவது உங்கள் கடமை என்று நான் கருதுகிறேன்.
இதை மதம் என்று நினைக்கும் வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால் மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக் கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம்தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள்.
“உண்மையான மதம் சமூகத்துக்கு அஸ்திவாரமாயிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான் எல்லா அரசாங்கங்களும் அவற்றின் அதிகாரங்களும் அமைந்துள்ளன.”
“ஒரு மனிதன் நிகழ்காலத்தில்தான் வாழ முடியும். நிகழ்காலம் கடந்த காலத்தைப் பின்னே விட்டு வருவதால் அமைந்திருக்கும்
கடந்த காலம் தோற்றுவித்த விஷயங்களை ஆராய்வது நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள உதவாது.

