More on this book
Community
Kindle Notes & Highlights
அவனுக்காகத் தொடர்ந்து பிறரிடம் பேசுவான்.
துரைக்கண்ணு எப்போதும் கோபமாயிருப்பது போல் தோன்றுவான். ஆனால் பாண்டுவோடு திரும்பி லாரியில் வரும்போது அவனிடம் அன்பாகப் பேசுவான். தமாஷ் பேசுவான். அப்போது பாண்டு மட்டும் தனியாக இருக்க வேண்டுமென்பதில்லை. இவன் கோபித்துக் கொள்ளும்போது கூட இருந்தவர்களைத் தவிரப் புதிய மனிதர்களின் கூட்டம் எவ்வளவு இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பாண்டுவைச் சமாதானம் செய்வான் துரைக்கண்ணு.
அவன் முகம் கோபமாக இருந்தாலும், அவனுள்ளே எப்போதும் ஆனந்தமாகத்தான் இருக்கிறான். இரண்டுக்குமே காரணம் இல்லை.
இப்போது சின்னான் ஓடிவந்த அவசரத்தில் எச்சில் துப்பி மண்ணைத் தள்ளாமல் வந்துவிட, பக்கத்தில் இருந்த ஒருவன் காலால் அதன் மீது மண்ணைத் தள்ளினான்.
“நோ மென்ஷன்னு
இந்த மனிதர்களுடைய ஆதரவில் வாழ்கின்ற மிருகங்களையும்,
அவர்களின் முன்னே ஒரு கிராமத்து நாய் ‘பைலட்’ மாதிரி ஓடி ஓடி நின்று திரும்பித் திரும்பி இவனைப் பார்த்துக் குரைத்தது.
விழிப்பு, உறக்கம் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். வெகு காலத்துக்கு முன்பே செத்துப் போனவர்களையெல்லாம் இப்போது கூப்பிட்டுப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு அவர் பேசுவார்.
யாரையோ நினைத்துக்கொண்டு அவர் பேசுவார். யாரையோ நினைத்துக்கொண்டு யாரிடமாவது அவர் பேசும்போது, இருக்கிற நிகழ்கால மனிதர்கள் அவருக்காக இறந்தகால மனிதர்களின் பாத்திரமேற்று நடிப்பார்கள்.
எனக்கு அக்காவும் அம்மாவுமாக இருப்பதனாலே நான் அக்கம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சு இந்த ஊருக்கே இப்போ அக்கம்மா ஆயிட்டாங்க”
“நம்ப மீட் பண்ணி இப்போ மூணு மணி நேரம்கூட இன்னம் ஆகலே இல்லே?... ரெண்டு பேர் பிரெண்ட்ஸ் ஆகறதுக்கு நெறையப் பழக்கம் தேவை இல்லை…
என்னைத் தவிர எல்லாவற்றின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.”
அவர் என்னெப் பெத்த அப்பா இல்லே – அண்ட் ஆல்ஸோ மை மதர் – எங்கம்மா கூட என்னைப் பெத்த அம்மா இல்லே…
அன்ட்… தெ வெர் நாட ஹஸ்பெண்ட் அண்ட் வய்ஃப்…”
foundling.
ரயில் காரேஜ்லே அனாதையாய்க் கெடந்தேனாம்.. அவருடைய
எனக்கு ‘பாப்டைஸ்’ பண்ணக் கூட அவர் சம்மதிக்கலே. ‘உன் மதம் எவ்வளவு உயர்வா இருந்தாலும் அதுக்காக இந்தக் குழந்தை தலையிலே அதைச் சுமத்த வேணாம்’னு சொல்லுவார்.
‘அவனுக்காகத் தோணிணா அப்புறமா கிறிஸ்தவனாகவோ, இந்துவாகவோ, முஸல்மானாவோ அவன் இஷ்டப்படி ஆகட்டும்…
நாம்ப அவனை நல்ல மனுஷனா...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்கு அம்மாவோட போவேன். அப்பாவோட எப்பவாவது கோயிலுக்குப் போவேன்.
இங்கிலீஷ் பேசினால் அவருக்குப் புரியும். ஆனால் பேசத் தெரியாது. நானும் மம்மியும் அவரை எப்பவாவது இங்கிலீஷ் பேசவெச்சிச்
சிரிப்போம்; நாங்க சிரிக்கறதுக்காகப் பேசுவார்! ஆனால் நாங்க பேசற தமிழுக்காக அவர் சிரிக்கவே மாட்டார்.”
இவன் தனக்காகவும் தன்னோடு ஏற்பட்ட நட்புக்காகவும் குடிக்கிறான் என்பதை மிகவும் பெருமிதமாக உணர்ந்தான்.
அவருக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதே ஒழிய அவருக்கு அந்த வெள்ளைக்காரப் பண்புகள் நிறைய உண்டு. அவர் மற்றவர்கள் முன்னால் அழமாட்டார். ஏன்? மம்மியின் முன்னால்கூட அவர் அழமாட்டார்.
அவர் மிலிட்டரியில் இருந்தபோது
மைக்கேல்!
மம்மியும் மைக்கேலும் திருமணக்கோலத்தில்,
“மணிலாக் கொட்டைங்கறதுதான் மல்லாக்கொட்டைன்னு ‘கலோக்கிய’லா ஆயிடுச்சு.
இது தென்னாப்பரிக்காவிலேருந்து இங்கே வந்திருக்கணும். மணிலாவிலேருந்து வந்ததனால் மணிலாக்கொட்டைன்னு பேரு”
“மனுஷனைப் பத்தியோ, கடவுளைப் பத்தியோ முன் கூட்டியே தீர்மானம் ஒண்ணுமில்லாமல் - திறந்த மனசோட பார்த்தா எல்லா மனுஷன்லேயும் கடவுளைப் பார்க்கலாம்”
வாழ்க்கையிலே துன்பப்படுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். துன்பப்படுத்துகிறவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்கிறவர்கள்தான் ரொம்பக் குறைவு. அந்தக குறைவானவர்களில் நீங்கள் ஒருவர்…”
இந்தக் குடும்பத்தையே ஏதோ சாபம் வந்து அழிச்ச மாதிரி செயலோட இருந்தவங்களையெல்லாம் பறிகுடுத்துட்டு வயசான அந்தக் கிழவரும், வயசு வராத வயசு விதவையுமா எங்க குடும்பம் நிர்க்கதியா நின்னிருக்கு…
இருபத்தைஞ்சு வருஷத்துக்கப்புறம் என்னை இவ்வளவு பெரிய ஆண்பிள்ளையா மட்டும் பார்க்கறவங்களுக்கு எனக்குப் பின்னால இருக்கிற இந்த நியாய மெல்லாம் எப்படிப் புரியும்?
நான் - இந்தச் சொத்து, எனக்கு மனைவியாயிட்ட உரிமை - இவ்வளவுதான் தெரியுது அதுக்கு – அதனாலே நியாயம் எனக்கும் தெரியாமல் போகலாமா?”
கர்வமாக லேசான சிரிப்புடன் ஆரம்பித்தாள்.
“கிளியாம்பா எனக்குச் சிநேகிதம்னா..? நானாடா அவுங்க வூட்டுக்குப் போனேன்? என் சிநேகிதம் வேணும்னு என்னைத் தேடி அவதான் இங்கே வந்தா. அப்படித்தான் நம்ப சிநேகிதம்! ஏன் தெரியுமா? என் நெலமை அப்பிடி… இந்த வூட்டை விட்டுப் போயிட்டு, இந்த வூட்டுக்கே திரும்பி வந்து வாசல்படி மிதிச்சவதான் - வேற ஒரு வாசல்படி, மிதிச்சிருப்பேனாடா? ‘எதிரிலே வந்தா – சகுனத் தடையா நின்னா’ன்னு உண்டா? கேட்டுப்பாரு. நம்ப நெலமை நமக்குத் தெரியாட்டி அது என்னா சென்மம்? எங்க பூடுது சிநேகிதம்?
பாக்காத ஒறவும், கேக்காத கடனும் பாழாப் பூடும்னு சொல்லுவாங்க. அதனாலே தான் - யாராவது வந்து என்னை...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எது ஒண்ணுமே அப்படித்தான் மகனே… சொல்ல வேண்டிய நேரத்திலே சொல்லிடணும்; புரியும்போது புரியும்.
கோபம் வந்தவங்களெல்லாம் ஆசை உள்ளவங்களைக் கஷ்டப்படுத்துவாங்க.
மம்மி பர்மாவில் இருந்தவள்.
நான் போய் நல்ல பெரிய தடிக்கொம்பாய்ப் பார்த்து ஒடிச்சுக்கொண்டு வந்து மரியாதையா அவர் கையிலே கொடுப்பேன்.”
திரௌபதி அம்மன் கோயில்லே ஒளிஞ்சிக்கிட்டிருந்துட்டு
ஹென்றிக்குப் பப்பா சொல்கிற பல விஷயங்கள் ஏற்கெனவே அவளுக்குத் தெரிந்தவையென்றாலும், பல முறை பல சந்தர்ப்பங்களில் அவர் சொல்லக் கேட்டிருக்கிறாள் என்றாலும் இப்போது புதிதாக அவர் ஹென்றியிடம் சொல்வதை அவளும் புதிதாகவே ஒவ்வொரு
முறையும் கேட்டாள். ஹென்றியுடன் சேர்ந்து கொண்டு – ஒப்புக்காக அல்ல – நிஜமாகவே சிரிப்பாள்; அழுவாள்.
“கடவுளே! எனக்குப் புதிதாக எதுவுமே வேண்டாம்; இருக்கிறதெல்லாம் இப்படியே நீடித்தால் போதும்…”
இப்படிச் சொல்லிவிட்டுப் பப்பா சிரிப்பார்; “இதைவிடப் பேராசை கிடையாது, தெரியுமா?
அப்புறம் எதுக்கு அது வேணும், இது வேணும்னு கட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இருக்கிறது எதுவும் அப்படியே இருக்காது மகனே! வளரும், மாறும்.
நாம்ம மூணு பேரும் ஒண்ணாகவே இருக்கோம் - இதைத்தான் மகனே நான் கடவுள்கிட்ட வேண்டினேன். வேண்டறதுன்னா கேக்கறதில்லேமகனே; விரும்பறது-நீ சொல்றயே ‘ஐ விஷ்’னு…அதான்.
மைக்கேல் பெங்களுர்க்காரர். எனக்கு ஊர் தமிழ் நாட்டிலே ஒரு குக்கிராமம். மைக்கேலுக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். அவ்வளவுதான் எங்களுக்குள் சொந்தம்.