இதை வாசிக்க வேண்டாம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

View story at Medium.com


இது ஒரு அன்பான சவால் — கட்டளை என்றே வைத்துக் கொள்ளுங்கள். இந்தச் சவால் பற்றி அறிகின்ற கணத்திலேயே, அதில் தோற்றுப் போவீர்கள்.


உங்கள் கண்கள், நீங்கள் அறிந்த மொழியின் எழுத்துக்களைக் கண்ட மாத்திரத்திலேயே அதனை வாசித்து உணர்ந்து கொள்ள முந்திக் கொள்ளும்.


ஆனால், இந்த நிலைமை, மிக இயல்பானது — உலகிலுள்ள கண்களால் பார்க்க கூடிய அத்தனை பேருக்கும் பொதுவான ஆற்றல் என்று நீங்கள் நம்பிவிடக் கூடாது.


வாழ்நாள் முழுக்க வாசிக்கத் தெரியாமலேயே, வாழ்தலின் ஒரு பகுதியைத் தொலைத்த மக்களின் தொகை என்பது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.


உலகில் வயது வந்தவர்களில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் எந்த மொழியிலும் வாசிக்கத் தெரியாதவர்களாய் இருக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல்.


அத்தோடு நின்றுவிடவில்லை, 250 மில்லியன் சிறுவர்கள், கல்வி கற்காமலேயே தம் வாழ்க்கையை கேள்விக்குறியோடு (?) தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.


வாசிப்புத் திறன் உன்னத நிலையை உணர்த்தவும், கற்றலின் தேவையை முன்னிருத்தவும் — வாசிப்பதை நேசிக்கின்ற ரூம் டூ ரீட் (RoomToRead) அமைப்பு, “இதனை வாசிக்க வேண்டாம்” (Do not Read This) என்ற தொனிப்பொருளில் ஒரு செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.


அதன் நிமித்தம் உருவாக்கப்பட்டுள்ள காணொளி இது.



அந்த செயற்றிட்டம் பற்றியும் வாசிப்பு என்கின்ற திறனின் அவசியம் பற்றியும் பதிய வேண்டுமென்ற என் எண்ணத்தின் நீட்சிதான் இந்தப் பதிவு.


“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்று சும்மா சொல்லியிருக்கமாட்டார்கள்.


உங்கள் நண்பர்களிடமும் இதனைப் பகிர்ந்து வாசிப்பின் அவசியத்தையும் கற்றலின் தேவையையும் முன்னிற்கச் செய்யுங்கள்.


நன்றி.



உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu


Filed under: அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2014 08:06
No comments have been added yet.