எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் மூன்று வீடுகளிலும் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள் கனகா. திரும்பி வரும்போது வடை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றெண்ணியிருந்தாள். ஒரு கடையில் எப்போதும் சுடச்சுட வடை போட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த கடை நெருங்கியதும் வேகத்தைக் குறைத்தாள். அலுமியக் கூடைகளில் வடை, போண்டா என்று தனித்தனியாக கொட்டி வைத்திருந்தார்கள். கண்ணாடிப் பெட்டிக்குள்ளும் சமோசா, பக்கோடா என்று கண்கவரும்படி இருந்தன. ஒரு அம்மா வாணலியில்...
Published on March 03, 2026 05:10