குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்க்கையில் உள்ளே மூன்று தலைகள் மிரட்சியுடன் உறைந்து கிடந்தன.
இது தினமுரசு வார இதழில் வெளியாகிய இடி அமீன் தொடரில் வந்திருந்த வாசகம். அச்சொட்டாக இப்படித்தான் எழுதப்பட்டிருந்ததா என்று நினைவில்லை. ஆனால் அந்தக் காட்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அப்போது எனக்குப் பதினேழு பதினெட்டு வயது இருக்கலாம். யாழ்ப்பாணம் மறுபடியும் ஶ்ரீலங்கா அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த காலம். இயல்பாகவோ அல்லது வலிந்தோ சில விசயங்கள் நமக்குப் புதிதாகக் கொடுக்கப்பட்டன. பெப்சி, பஃன்டா போன்ற ...
Published on December 25, 2025 16:30