வழியில் நைல் நதி குறுக்கிட்டது.
இந்தப் பக்கம் புகண்டா காடும் அந்தப் பக்கம் சவான்னா புல்வெளியும் பரவிக்கிடக்க, நடுவே நதி கடல்போல வியாபித்திருந்தது. நாம் பாலத்தைக் கடக்கும்போது சூரியன் காடுகளிடையே தலை தூக்க ஆரம்பித்திருந்தான். மொத்த ஆறுமே ஒரு வண்ணக்குழம்புபோல நகர்ந்துகொண்டிருந்தது. அதன் இரு புறங்களிலும் நீருக்குள்ளிருந்து தலை தூக்கியிருந்த நீர் யானைகளின் வழுக்கல் நெற்றிகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறித்து மின்னின. ஆங்காங்கே சில முதலைகளையும் மௌலீமா காட்டினாள். நாங்கள் வாகனத்தைப் பாலத்தருகே நிறுத்...
Published on December 30, 2025 16:30