இது புகண்டா இனக்குழுக்களிடையே நிலவும் ஒரு நாட்டார் கதை.
ஒரு கிராமத்திலே மட்பானைகளை செய்யும் குயவர் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். ஏனைய சிறுவர்களைப்போலன்றி கொஞ்சம் விட்டேற்றியாக, தானும் தன்பாடுமாகத்தான் அவன் திரிவான். ஒருவர் வித்தியாசமாக இருந்தால் அவரை எள்ளி நகையாடுவது ஒன்றும் மனிதர்களுக்குப் புதிதல்லவே. இந்தச் சிறுவனையும் அவன் பிறந்ததிலிருந்தே ஊரில் அவனை எல்லோரும் பழித்துவந்தார்கள். அவனது தாய்கூட தன் பிள்ளை மற்றவர்களைப்போல இல்லையே என்று வருந்தினாள். அவனும் ஒரு கட்டத...
Published on December 30, 2025 22:30