அன்புள்ள ஜெ,
அக்டோபர் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சென்ற இதழில் பார்கவி கவிதை வாயிலாக இசை அனுபவத்தைக் குறித்து எழுதிய ‘கடலில் ஊறும் சிறு தும்பி – 2’ கட்டுரையின் இரண்டாம் பாகம் இவ்விதழில் வெளியாகியுள்ளது. க.நா.சு. கட்டுரைத் தொடரின் பகுதியாக காரைக்கால் அம்மையார் கவிதைகள் குறித்து க.நா.சு எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. கவிஞர் செல்வசங்கரனை மதார் நேர்காணல் செய்துள்ளார். வேணு வேட்ராயன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தேவதேவனின் ‘கிச்சு கிச்சு மூட்டினால்’ (If tickled…) கவிதை மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது.
சில தமிழ் கவிதைகள் பகுதியில் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதாளர், எழுத்தாளர் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் உள்ளன.
https://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
மதார், ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
Published on October 17, 2025 11:31