இன்மையின் இருப்பு, கடிதம்
சங்கச் சித்திரங்கள் மறுவாசிப்பில் இருக்கிறேன். “சூனியத்தில் ஒரு இடம்” எனது நேரிடையான அனுபவமாக உள்ளது.
எனது அம்மாவின் ஊரும் மனைவியின் ஊரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆதலால் அடிக்கடி பயணம் அமையும். ஆண்டாள் கோயிலின் மேலரத வீதியில் இல்லம். அங்கு இருக்கும் போதெல்லாம் தின்தோறும் கோயிலுக்கு செல்வது வழக்கம். கோயிலுக்கு செல்லும் வழியில் மடத்துத் தெருவில் யானை கொட்டில் உண்டு. இங்கு தான் கோயில் யானை பல வருடங்களாக பராமரிக்கப்பட்டது.
சென்ற வருடம் யானை பாகன் யானைக்கு செய்த சித்திரவதைகள் படம் பிடிக்கப்பட்டதால், யானை இப்பொழுது தொலைவான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மடத்து தெருவின் காலியான கொட்டில் கண்டு கண்கள் கலங்குவதை தவிர்க்க முடிவதில்லை.
தங்களது யானை கதைகளின் தாக்கமும், என்னுடைய சொந்த ஊரான கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலின் என்னைவிட 5 வயது மூத்த யானையுடன் 20 வருடங்கள் சேர்ந்து வளர்ந்த ஞாபகமும், இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் காலியான கொட்டிலை நினைவுபடுத்துகிறது.
கண்கள் பனிக்க
வெங்கட்ராமன், பெங்களூரு
அன்புள்ள வெங்கட்,
அந்த இல்லாத இருப்பை உணர்தல் என்னும் அனுபவம் பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும். தமிழகத்தில் பலருக்கும் கட்டிடங்கள் சார்ந்தே அந்த அனுபவம். அதிலும் இடிக்கப்பட்ட திரையரங்குகள் சார்ந்து அந்த இன்மையின் இருப்பை உணர்பவர்கள் மிகுதி. யானைகள் சார்ந்து அந்த அனுபவம் இருப்பது ஒரு நல்லூழ்தான். வாழ்த்துக்கள்.
ஜெ
சங்கசித்திரங்கள் வாங்க சங்கசித்திரங்கள் -கடிதம் சங்கசித்திரங்கள் சங்கசித்திரங்கள்-விமர்சனம் சங்கசித்திரங்கள், மீண்டும்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers


