இந்தியர்களாகிய நமக்கு நம்மிடம் மிகப்பெரிய அறிவுச்சேகரிப்பு இருக்கிறது என்றும், வேறெங்கும் இதெல்லாம் இல்லை என்றும் ஒரு மிதப்பு உண்டு. நம்முடைய பெருமிதம் பெரும்பாலும் பொய்யாக உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்தின்போது நமக்கிருந்த தாழ்வுணர்ச்சியை போக்க கொஞ்சம் பெருக்கிச் சொன்னார்கள். அதை இன்றும் நம்பினால் நாம் அறிவிலிகளாக ஆவோம். உலகின் மிகப்பெரிய, மிகப்பழைய நூலகங்களில் ஒன்றின் முன் நிற்கையில் அந்த பணிவும், மானுடன் என்ற வகையில் பெருமிதமும் உருவாகியது.
Published on August 22, 2025 11:36