அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். இந்தக் காலாண்டிற்கான க.நா.சு உரையாடல் அரங்கிற்கு, எழுத்தாளர் ம. நவீன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாடத் தயாராகியுள்ளோம். மலேசியாவில் வாழும் படைப்பாளியாக மலேசியா நவீன், பேய்ச்சியின் கர்த்தாவாக பேய்ச்சி நவீன், வல்லினம் இதழ் ஆசிரியராக மதிக்கப்படும் இதழியலாளர், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆதலின், வாசகர்கள் ஒருவரை அழைத்துப் பலரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை கேட்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிடுவதில்லை என காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025, மாலை 7:00 மணி IST / காலை 8:30 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
7:00 PM IST / 8:30 AM CST : வாழ்த்துப்பா
7:05 PM IST / 8:35 AM CST :அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
7:10 PM IST / 8:40 AM CST :சிகண்டி நாவலை முன்வைத்து சிறப்பு உரை – மலர்விழி மணியம் 7:20 PM IST/ 8:50 AM CST :சிறுகதைகளை முன்வைத்து சிறப்பு உரை – ஜெகதீஸ் குமார்
7:30 PM IST / 9:00 AM CST : கேள்வி பதில் நேரம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com / contact@vishnupuramusa.org
Published on August 20, 2025 02:22