அன்புள்ள ஜெ,
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சுகுமாரன் 50 விழாவில் கவிஞர் இசை ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் ‘சுகுமாரனின் பிந்தைய கவிதைகள்’ இடம்பெற்றுள்ளது. கவிஞர் ஆனந்த்குமாரின் சமீபத்திய தொகுப்பான ‘பிளம்கேக்’ பற்றி மதார் எழுதியுள்ளார். சபரிநாதனின் ‘து.ஆ’ தொகுப்பு குறித்து சொர்ணவேல் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு’ என்ற கட்டுரையும், ச.துரையின் சில சமீபத்திய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
கவிதைகள் இதழ்
Published on August 20, 2025 11:31