வேதாசலம், கடிதங்கள்

தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம் வேதாசலத்துக்கு விருது- கடிதம் வேதாசலம், மின்னஞ்சல் எதற்காக? நம் வரலாற்றாசிரியர்கள் ஏன் மறைக்கப்பட்டிருக்கிறார்கள்? வேதாசலம்,வாழ்த்துக்கள்- ஒரு கேள்வி.

அன்புடையீர்

வணக்கம். நலம்தானே?நேற்று இரவு அந்திமழை இணையதளத்தில் வெளிவந்த உங்களுடைய நீண்ட விரிவான நேர்காணலைப் படித்தேன். வரலாற்றில் பொற்காலம் இருண்டகாலம் என்பது கிடையாது! -தொல்லியல் ஆய்வாளர் வெ.வேதாசலம் ) பதினொரு பிள்ளைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் தளரா முயற்சியாலும் ஆர்வத்தாலும் கல்வி கற்று உயர்ந்த உங்கள் இளமைப்பருவச் செய்திகளை இந்த நேர்காணல் இல்லாவிட்டால் எங்களைப் போன்றவர்கள் தெரிந்துகொள்ள வழி இருக்காது. வேலையோடு வீட்டுக்குப் போ என்னும் ஆசிரியர் சொல் இறைவன் காட்டிய வழி என்றே தோன்றுகிறது. அதன் பிறகு இன்று வரையிலான உங்கள் ஆய்வுப் பயணங்கள்  பெரிய வரலாற்றுச் செய்தியைப் போல உள்ளது. சிற்றூர்களில் ஓர் ஆய்வாளருக்கு ஏற்படக்கூடிய சிரங்களை போகிற போக்கில் ஒரு புன்னகையோடு சொல்லிவிட்டு கடந்துவிட்டீர்கள். எதிர்காலத்தில் சில நல்ல உள்ளங்களால் உங்கள் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் என்றே நான் நம்புகிறேன்.வாழ்த்துகள்அன்புடன்பாவண்ணன்**Dear Thiru.Vedachalam. congrats on the Thooran award conferred on you. I am happy to hear that. All the best. Baskaran


S.Theodore Baskaran**

Dear Sir

Heartiest congratulations on receiving the Thooran award.I have started to read your contributions in Jeyamohan’s site and it is really inspiring.As always the recognitions to anything in a higher plane comes late but with this award I hope more people start getting inspired by you and start understanding the contributions you have made to history.of Tamil Nadu/RegardsRamesh**அன்புடையீர்வணக்கம்தமிழ்விக்கி- தூரன் விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்தங்கள் பணி மேன் மேலும் சிறக்க அந்த எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்களுடன் உடன் இருப்பதாகஅன்புடன்அ மு தௌபீக்**அன்புள்ள சார் அவர்களுக்கு தூரன் விருதுக்காக உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். போனவருடம் தூரன்விழாவில் நானும் கலந்து கொண்டிருந்தேன். உங்கள் அமர்விலும் இருந்திருக்கிறேன். உங்கள் பணிகளைப்பற்றித்தெரிந்து வியந்திருக்கிறேன். மறுபடியும் என் வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

With Regards,

 T.Daisy,Trichy.  ** 

அன்புள்ள திரு. வெ. வேதாசலம் அவர்களுக்கு,

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி-தூரன் விருது உங்களுக்கு வழங்கப்படவிருப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் ஒரு வாசகனாக, உங்கள் ஆய்வுகளின் முக்கியத்துவத்தையும், தமிழ் வரலாறு மற்றும் பண்பாட்டுக் களத்தில் நீங்கள் ஆற்றிவரும் முப்பதாண்டு காலப் பங்களிப்பையும் அவரது எழுத்துக்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

தமிழின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவரான உங்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது தமிழுக்கும், தமிழ் ஆய்வுலகிற்கும் கிடைத்த பெருமை. உங்கள் அரிய பணிகளுக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

நன்றி

சாரதி

**

வணக்கம்.

தமிழ் விக்கி – தூரன் விருது 2025 தங்களுக்குக் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்வெய்துகின்றேன்.  சென்ற ஆண்டே நான் மனதில் நினைத்த ஒன்று இப்பொழுது நிகழ்ந்திருக்கிறது.  வாழ்த்துக்கள்.  நிகழ்வில் நேரில் கலந்துக்கொள்கிறேன்.நன்றிபேரன்புடன்முனைவர் மோ.கோ. கோவைமணி**

வணக்கம் சார். என் பெயர் வெங்கட பிரசாத். பிறந்து வளர்ந்த ஊர் சென்னை. தற்போது பணி நிமித்தமாக அமெரிக்காவில் இருக்கிறேன்.

தமிழ் விக்கி தூரன் விருது பெறும் உங்களுக்கு என் வாழ்த்துகள். அறிவியக்க பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தி  கொண்டு, அடுத்து வரும் தலைமுறைக்கு நீங்கள் கை அளித்து வரும் செல்வம் உண்மையில் பெரும் மதிப்புடையது.

அங்கீகாரம், கவனம் என்ற எந்த வெளி ஊக்கத்தையும் நோக்காமல், மன நிறைவு மட்டுமே போதும் அதே என் முன்னே செலுத்தும் விசை என வாழும் நீங்கள் – யாரும் காணாத பாலையிலும் நிறைவாக பெய்யும் மழை மேகம் போல.

அந்திமழை இதழில் உங்கள் பேட்டி படித்தேன். இயல்பான ஆனால் தீர்க்கமான பதில்கள். மிகவும் ரசித்தேன்.

வெங்கடப் பிரசாத்

**
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2025 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.