அன்புள்ள ஜெ,
ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ரீல்கவின் டுயினோ எலஜிக்கள் கவிதை தொகுப்பை பற்றி ‘ரீல்க டுயினோ’ என்ற கட்டுரையை சைதன்யா எழுதியுள்ளார். கமலதேவி, போகன் சங்கர் கவிதை ‘உலராத கண்ணீர்‘ குறித்து வாசிப்பனுபவம் எழுதியுள்ளார். தேவதேவனின் கவிதையின் மதம் கட்டுரை தொகுப்பின் ஒரு பகுதியான ‘மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்’ என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது. ‘காதலெனும் துறவு‘ என்னும் தலைப்பில் சக்திவேல் எழுதிய கட்டுரையும், ‘வாழ்வைத் திருடும் திருடர்கள்‘ என்னும் தலைப்பில் மதாரஂ எழுதிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.
https://www.kavithaigal.in/
நன்றி
ஆசிரியர் குழு
(மணவாளன், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)
Published on July 18, 2025 11:32